Thursday, July 2, 2009

மதங்கள் எனது பார்வையில்.

மனிதனை நெறிப்படுத்தவென தோன்றியவை மதங்கள். ஆதி மனிதன் தன்னைத் தான் ஒழுங்குபடுத்திக்கொள்ள தோற்றுவிக்கப்பட்டவை மதங்கள். ஆதிமனிதன் சிறு சிறு குழுவாகவும், பல குழு அடங்கிய ஒரு இனமாகவும் வாழ்ந்த போது அந்த இனத்துக்குள் ஒற்றுமை ஓங்கவும், அச்சம் நீங்கவும், தனிமனித வளர்ச்சியடையவும் மதங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

ஆதி காலகட்டங்களில் மதம் ஒரு வளர்ச்சியடையாத, ஒரு இனத்தின் நலன்களை பாதுகாக்கக் கூடிய அல்லது குறுகிய நோக்கத்தை கொண்ட நம்பிக்கைகளின் கலவையாக இருந்தது. இயற்கையின் பிரம்மாண்டத்தின் மீது இருந்த பயம், பிணி, நோய், மூப்பு, இறப்பு போன்றவை மனிதனை நிலை குலையச் செய்த போது, அவனுக்கு நம்பிக்கை தருவதாகவும் இருந்தது மதம் . அது அந்த இனம் வாழ்ந்த நிலம், இயற்கை சூழல், முதன்மைத் தொழில், உணவு ஆகியவற்றை சார்ந்த வடிவம் கொண்டதாக இருந்தது. இந்த மதம் அல்லது சமயம், ஒரு மனித இனத்தின் கலை, இலக்கியம், நாகரீகம், மருத்துவம், மற்றும் பொழுது போக்கு ஆகியவற்றிக்கு அடிப்படையாக அமைந்தது.

மனிதன் பரிணாம வளர்ச்சி அடைய அடைய, அவன் நிலங்களை கடக்க விரும்பினான். அவன் தன்னோடு தன் மத நம்பிக்கைகளையும் எடுத்துச் சென்றான். காலப்போக்கில் பூகோல ரீதியாக இணைப்பின்றி இருந்த இனங்கள், அல்லது தங்களுக்கென்று ஒரு தனி 'மத' 'சமய' கோட்பாட்டை கொண்ட மக்கள், இடம்பெயர்ந்தனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் வேறொரு இனம் வாழ்த்த பகுதிக்கு, அவர்கள் நிலங்களுக்குள் செல்ல, நம்பிக்கைகள் ஒன்றை ஒன்று தழுவியும் எதிர்த்தும் நின்றன. தனது மரபு வழியாகவும், ஆழ்ந்த நம்பிக்கை மூலமாகவும் தனக்குள் பதிந்த மத வழிமுறைகள் பிற இனத்தாலும்; மதத்தாலும் நிராகரிக்கப் பட்டமை இடம்பெயர்ந்த அல்லது பிற இன மக்களை உள்வாங்கிய இனத்தின் உணர்வை குத்த நேரிட்டது. அன்று தொடங்கி இன்று வரை மனிதனின் நலனுக்காக தோற்றுவிக்கப்பட்ட மதம் வெவ்வேறு காலங்களில் இடங்களில் மனிதனுக்கு எதிராக மாறத்தொடங்கியது.

தொன்று தொட்டே இவ்வாறு பிற மத, சமய, இன, மொழி, அடிப்படையில் மனிதனை மனிதன் வேறுபடுத்திப் பார்த்துக்கொண்டான். அதனால், தான் சார்ந்து நிற்கும் மதமே உயர்ந்தது என்று எண்ணிய மனிதன் பிற மதம் சார்ந்த மனிதர்களை எதிர்த்தான். தான் வாழ்ந்த நிலம் மற்றும் இயற்க்கை ஆதாரம் தனக்கும், தன் மதம் சார்ந்த இனத்திற்குமே சொந்தம் என்று நம்பினான், பின் அதுவே, இந்த மொத்த பூமியும் தான் நம்பும் இறைவனுக்கே சொந்தம் என்ற அடிப்படையை தோற்றுவித்தது. இந்த எண்ணம் நிலங்களை அபகரிக்கும் போராக மாறியது. தான் அபகரித்த நிலங்களில் இருந்த சிறிய இனங்களின் மீதும், தங்களுக்கென்று ஒரு மத நம்பிகையுடன் வாழ்ந்த மக்களின் மீதும் ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் மத நம்பிக்கைகளை திணித்தனர்.

கலாச்சார ரீதியிலும், அறிவியல் ரீதியிலும் தாழ்ந்த வளர்ச்சி அடைந்திருந்த மதம் அல்லது இனம் அல்லது இனங்கள் வீழ்ந்தது. போரில் தோற்கடிக்கப்பட்ட மக்கள் அல்லது போர் புரிய தெரியாத மக்கள், தங்களை ஆட்கொண்டவர்களை கண்டு பயந்தனர், வியந்தனர். காலப்போக்கில் பெரிய மதங்கள் சிறிய மதங்களை விழுங்கி பெருத்தன. இவ்வாறு இன்று கணக்கில் வராமல் அழிந்த மதங்கள் பல ஆயிரம் கூட இருக்கலாம். இந்த மத, சமய, இன, மொழி, நிற அடிப்படையிலான மக்களையும், அவர் தம் நிலங்களையும் வளங்களையும் ஆக்கிரமிக்கும் வழக்கம் இன்னும் தொடர்ந்து கொண்டு இருப்பது தான் தீராத போராக, தீவிரவாதமாக இன்று நம்மிடையே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

இந்த தீயில் கருகிய மனிதனின் ஆற்றல் அளவிட முடியாதது. ஆம், ஒவ்வொரு இனத்தை சேர்ந்த மனிதனாலும் கண்டறியப்பட்ட; உருவாக்கப்பட்ட எத்தனையோ அறிவியல், இலக்கிய படைப்புகள் இந்த தீயில் கருகின. மனிதனின் அனைத்து தேவையையும் பூர்த்தி செய்ய முடிந்த அறிவியல் வளர்ச்சி இந்த பேதங்களை கலைந்திருக்க வேண்டும்.

ஆனால், மனிதனின் எல்லையற்ற ஆசைகள் அதற்க்கு இன்றும் தடையாக இருக்கிறது. ஆம், நாம் எதை அறிவியலால் விளக்க இயலாதோ, எதை புரிந்து கொள்ள முடிய வில்லையோ, அல்லது எது இல்லையோ அதை தெரிந்து கொள்ள நம் பேராசையால் முனைகிறோம். அது தான் "இறப்பும் அதற்குப் பின்னும்". வாழும் போது பிறரை அழித்து, துன்புறுத்தி, ஆக்கிரமித்து வாழ நினைக்கும் மனிதன், தான் இறந்த பிறகு நிம்மதியாக சொர்கத்தில் வாழ்வோமென நம்புகிறான்; விரும்புகிறான்.

இந்த மாயயை அவனுக்குள் தோற்றுவித்தது எது? பூமியில் அமைதி திரும்ப முடியாமல் இருப்பதற்கு காரணம் என்ன? இறைவன் என்று ஒருவன் இருந்தால் அவனை உணர முடியாமல் போனதற்கு காரணம் என்ன? மதம்.

நாம் அனைவரும் ஒன்றில் இருந்து தான் வந்தோம். அந்த ஒன்று உன்னுடையதும் அல்ல என்னுடையதும் அல்ல. நீ நான் என்ற பேதம் ஒழியும் போது; அல்லது இந்த பேதம் என்னும் தீ அனைவரையும் அழித்து முடிக்கும் போது அது எது என்பது புரிய வரும்.

அனைப்போமா பேதம் என்ற தீயை. மதம் என்ற மாயயை?

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Tuesday, May 19, 2009

இங்கிலாந்தில் பயங்கரவாதி இந்தியாவில் தியாகி......


உதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே.......இவன் பகத் சிங்கின் தோழன்.

1919 இல் ஜாலியன் வாலாபாக் படு கொலை நிகழ்கிறது. படுகொலையை நிகழ்த்தியது மேஜர் டயர் இ படுகொலை செய்ய சொன்னது அதாவது உத்தரவு இட்டவனின் பெயரும் டயர் (Michael O'Dwyer) ஆம் இவன் மேஜர் டயரின் உயர் அதிகாரி.

இந்த படுகொலையின் போது அங்கு தண்ணீர் பரிமாறி கொண்டிருந்த சில இளைஞர்களில் ஒருவன்தான் உதம் சிங். குருதி தோய்ந்த மண்ணை தன் சட்டை பையில் சேகரித்து வைத்து கொண்டு தாக்குதல் செய்ய சொன்னவனை (அம்பை எய்தியவனை - Michael O'Dwyer) பழி வாங்க துடிகிறான். ஆகையால் இரண்டு மாதங்களாக அவனை தேடி அலைகிறான். ஆனால் அதன் பின்னரே உதம் சிங்குக்கு தெரிய வருகிறது Michael O'Dwyer மாற்றல் ஆகி இங்கிலாந்துகே சென்று விட்டான் என்று.

துவள வில்லை உதம் சிங்இ அதே ஆண்டு அவனை தேடி இங்கிலாந்துக்கு பயணம் அடைகிறான். இங்கிலாந்து சென்று சர்வர் வேலை போன்ற சிறு சிறு வேலைகள் செய்து கொண்டே Michael O'Dwyer ஐ தேடுகிறார். ஒரு ஆண்டு அல்ல இரண்டு ஆண்டு அல்ல... 21 ஆண்டுகள் தேடி கடைசியாக 13-ஆயச-1940 ஆண்டு ஒரு பொது விழாவில் கண்டு பிடித்து Michael O'Dwyer ஐ கொள்கிறான். மேலும் அந்த விழாவில் இருக்கும் 3 உயர் அதிகாரிகளை நோக்கியும் சுடுகிறார் அவர்கள் மூன்று பெரும் படுகாயமடைந்து (Lord Zetland, Luis Dane and Lord Lamington) பிழைத்து கொள்கிறார்கள்



மூன்று மாதங்களில் விசாரணை முடிந்து உதம் சிங்கை தீவிரவாதி என்று இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்து அவருக்கு மரண தண்டனை அளித்து... உதம் சிங்கை 31-துரடல-1940 இல் தூக்கில் இடுகிறார்கள். இறப்பதற்கு முன் உதம் சிங் சொல்கிறார் என் நாட்டில் வந்து 400௦௦ மக்களை கொன்றதற்கு நான் அவனை கொன்றது மிக சரியே என்று சொல்லி தூக்கு கயிற்றை முத்தமிடுகிறார்.

பிறகு 1974 இல் இந்திரா காந்தி பிரதமாராக இருக்கும் போது உதம் சிங்கின் எச்சங்கள் இந்தியா கொண்டு வரப்பட்ட எரிக்கப்பட்டு அவருடைய அஸ்தி கங்கையில் கரைக்க படுகிறது. அவருடைய உடல் பிரதமர்இ ஜனாதிபதி மற்றும் முதல்வர் அனைவரும் அஞ்சலி செலுத்தி அவரை தியாகி என்று புகழ்ந்துரைகிறார்கள்.

சரி இப்பொழுது விடயத்திற்கு வருவோம்.................

400௦௦ பேரை நம் மண்ணில் கொன்றதற்காக உதம் சிங் இங்கிலாந்து சென்று Michael O'Dwyer கொன்றதனால் தியாகி என்கிறோம் நாம்.....

ஆனால் இங்கிருந்து ராஜிவி காந்தியின் உத்தரவின் பேரில் இந்திய அமைதி படை இங்கிருந்து ஈழத்திற்கு சென்று 5400௦௦ பொது மக்களை மற்றும் 800௦௦ பெண்களை கற்பழித்து கொன்றதற்கு சுபா இங்கு வந்து ஒருவனை கொன்றாலே அது தவறா?

"ஒரு பெண் தன் கற்பை காப்பற்றி கொள்ள தன் நகங்களை ஆயுதமாக பயன் படுத்தி எதிரியை கொல்லலாம் மற்றும் என் சகோதிரியின் கற்பு பரி போகும் போது நிச்சயமாக் என்னால் அகிம்சையை கடை பிடிக்க முடியாது"
- மகாத்மா காந்தி

400 மக்களை கொன்றதற்கு உதம் சிங்கிற்கு இவ்வளவு வெறி வருமானால்.....

அதை விட 15 மடங்கு அதிகமான மக்களை (400 பேர் எங்கே - 6200 பேர் எங்கே) இந்திய அமைதி படை கொன்றதற்கு ஈழ தமிழனுக்கு எவ்வளவு வெறி வர வேண்டும்..... வந்தது.

பின் அவர்கள் செய்தால் மட்டும் குற்றமா?

அவர்கள் செய்தால் தீவிரவாதி பட்டம்... நாம் செய்தால் தியாகி பட்டமா?

நல்ல நியாம்டா சாமி.............

சிறிது கூட விடுதலை உணர்வு என்றால் என்ன அல்லது இன பற்று என்றால் என்ன என்று தெரியாத பதவிக்காக ழூழூ தின்னும் மனிதர்களுக்குஇ இந்த நியாங்கள் அனைத்தும் எங்கே புரிய போகிறது.......

ஆனால் ஒருவருக்கு புரிந்தது.....

''ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படையில் பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங்கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார். இலங்கைக்குப் போன படை இந்தியா திரும்பியவுடன்இ யோணன் சிங்குக்கு வீர சர்க்கார் விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த செய்தியை தன் அப்பாவிடம் தெரிவித்த யோணன்இ விருது விழாவுக்கு அவரையும் அழைத்திருக்கிறார்.

ஆனால் ரன்பீர் சிங்கோஇ 'இன விடுதலையை அடக்குவதற்காகக் கொடுக்கப்படும் விருதை நான் வீர விருதாகவே கருத மாட்டேன். அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர வேண்டாம். அந்த விருதை நீ வாங்கினால்இ நமக்குள் எந்த உறவும் இருக்காது' என்று சொல்ல...

யோணன் அந்த விருதையே புறக்கணித்திருக்கிறார்!''


ரன்பீர் சிங் ஒன்றும் தமிழர் இல்லையே..... பிறகு எப்படி ரன்பீர் சிங்கிற்கு புரிந்த ஈழ போராட்டத்தின் நியாயம் இங்கு இருக்கும் ஏராளமான தமிழகம் மற்றும் இந்திய நாதரிகளுக்கு புரிவதில்லையே ஏன்?

ஏன் எனில் அந்த நாதரிகளுக்கு சுதந்திரம் என்பது ஓசியில் கிடைத்தது மற்றும் அடிமை வாழ்கை என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியாது................

மேலும் ஒரு விஷயத்தை சொல்கிறேன்....................

1981 October 31 இந்திரா காந்தி அவரது பாது காவலலார்கலாலே சுட்டு கொல்லபடுகிறார். அவர்களுடைய பெயர் Satwant Singh மற்றும் Beant Singh. அதாவது இந்தியாவின் பிரதமரை தன் உயிரை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டிய இந்தியா ராணுவ வீரர்களே தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக சுட்டு கொள்கிறார்கள்.

இந்திரா காந்தியை கொன்றவர்களில் ஒருவன் அப்பொழுதே கொல்லப்டுகிறார்.... மற்றொருவன் மூன்று ஆண்டுகள் கழித்து கொல்லபடுகிறான். சீக்கிய குருமார்கள் இந்திரா காந்தியை கொன்றவர்களை சீக்கிய இனத்தின் தியாகியாக அறிவித்து இருகிறார்கள்!!!!

இப்பொழுது இந்திய அரசு ( காங்கிரஸ் ) என்ன செய போகிறது...

பிரதமரை கொன்றவனை தியாகிகள் என்று அறிவித்த இனத்தை தீவிரவாத இயக்கம் என்று சொல்லி தடை செய்திருக்க வேண்டாமா? ஏன் செய்ய வில்லை மாறாக அவர்களுக்கு பிரதமர் பதவி கொடுத்து அழகு பார்கிரிர்கலே அது ஏன்?

அப்படி எனில் ராஜிவ் காந்தியை கொன்றது சுபாதானே?

சுபாதான் அப்பொழுதே இறந்து விட்டாலே...

அதோடு சுபா கூட இருந்த ஐந்து பேரும்(ஒற்றை கண் சிவராசன் – உட்பட) பெங்களூரில் உள்ள வீட்டில் சயனைடு சாபிட்டு இறந்து விட்டார்களே பின் ஏன்?

இந்த வழக்கில் மேலும் நளினிஇ பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியார் 17 ஆண்டுகளுக்கு மேல் தனிமை சிறையில் வாடுகின்றனரே அது ஏன்?

இதற்கு மேலும் விடுதலை புலிகளுக்கு மட்டும் தடை ஏன்???

இங்கு பிரபாகரன் பெயரை சொன்னாலே தேசிய பாதுகாப்புக்கு சட்டம் பாயுமாம்....... (NSA)

ஆனால் சீக்கிய மடம் இந்திரா காந்தியை கொன்றவனை தியாகி என்கிறது..... !!!!!!

எதெற்கெடுத்தாலும் நான் இந்தியன் பிறகு தமிழன் என்று சொல்லும் அறிவு ஜீவிகளே இதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறிர்கள்?

தமிழர்களில் இருக்கும் கருங்காலி மற்றும் பீ தின்னும் கூட்டம் சீகியர்களிடம் இல்லை..

இப்படி வரலாற்று உண்மைகளை எடுத்து சொல்லி சீக்கியர்களுக்கு இப்படி நடக்கிறதுஇ தமிழர்களுக்கு மட்டும் ஏன் அநியாயம் செய்கிரிகள் என்று கேட்டால் நாம் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசுகிரோமாம் மற்றும் நாங்கள் எல்லாம் விடுதலை புலிகள் ஆதரவாளர்களாம்.........

அட நாய்களே.....

நியாத்தை கேட்பதற்கு நான் ஒன்றும் புலியாக இருக்க தேவை இல்லை…..
இந்தியனாக இருக்க தேவை இல்லை…..
தமிழனாகவோ இருக்க தேவை இல்லை

மனிதனாக இருந்தால் போதும்.....


இப்படிக்கு
மனிதர்
தமிழர்
இந்தியர்

நன்றி : தூவானம்




--
SIVA PRAKASAM
Software Engineer,
Mob: +91(0)9944005554
http://tamilarnesan.blogspot.com/

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.