Friday, April 24, 2009

ஏன் கருணாநிதி ஒரு சுய நலவாதி??




கருணாநிதி நமது முதல்வர், அவர் தமிழர்களுக்காக தமிழ் இனத்துக்காக பல நன்மைகளை செய்திருக்கிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது...

அவர் உரை எழுதிய பழந்தமிழ் நூல்கள், அவர் எழுதிய கட்டுரைகள், கதைகள், அனைத்தும் தமிழுக்கு நிச்சயம் நெடுநாள் புகழ் சேர்க்கும் தான்.

இது அவருடைய நீண்ட நாள் சாதனைகள், ஆனால், தற்ப்போது சில வருடங்களாக சுமார் 10-15 வருடங்களாக அவர், தன் குடும்ப நலனிலேயே கண்ணாய் இருப்பது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

குறிப்பாக இந்த ஈழத்தமிழர் விவகாரம் எழுந்தபோது முழுத் தமிழினமும், தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சி நடக்கும் போது ஈழத்தமிழர்களுக்கு எந்த துயரும் ஏற்பட அனுமதிக்க மாட்டார் என்று எதிர்கட்சியில் இருப்பவர்கள் கூட நம்பினார்கள், ஏன் பிரபாகரன் கூட நம்பியிருந்திருக்க கூடும். ஆனால் நடந்தது என்ன என்று நம் அனைவருக்கும் தெரியும், நாடாளுமன்ற உறிப்பினர்கள் பதவிவிலகள், மனித சங்கிலி, போராட்டம், என்று எழுந்தது அதை விட வேகமாக வலுவிழந்தது. ஏன்?

அதை விடக் குறிப்பாக, தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்கள் தமிழக அரசும் மத்திய அரசும் செய்யும் பிழையை, கொள்கை பிழையை சுட்டி காட்டியவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்ட்டனர். இலங்கை இராணுவத்தை கண்டிபவர்கள் தீவிரவாதியாக பார்க்கப்பட்டனர்!

எல்லாம் தாண்டி தேர்தல் வர, கருணாநிதியின் உடன் பிறப்புகள் தங்களை தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டனர். கலைஞர் என்பவர் எப்போதும் சுயானலதிற்க்காக் செயல்படமாட்டார் என்று நம்பினார்கள். ஆனால் நடந்தது என்ன? நேற்று பந்த் என்று முந்தாநாள் அறிவித்தார். ஈழதமிழர்களுக்காக, அவர்கள் துயரங்களில் நாமும் பங்கு போட்டு கொள்ளும் அடையாளமாக, அங்கு உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடு பட வேண்டும் என்றார்.

இது போன்ற சமயங்களில் அரசியல் பாகுபாடின்றி தமிழர்கள் இதற்க்கு ஆதரவு தர வேண்டும் என்றார். சரி, இப்போதாவது இதை செய்கிறார் இவர் நல்லவராக இருப்பாரோ, திருந்தி இருப்பாரோ ஒரு வேளை தான் செய்த பிழையை திருத்திகொள்ள முனைகிராரோ என்றெல்லாம் என்னும் பலரிடமும், கலைஞர் அவர்களை தமிழினத்தலைவர் என்று இன்னும எண்ணிக் கொண்டிருக்கும் பலரிடமும், ஏன் அவரிடமே நாம் கேட்கும் கேள்வி இது தான்.

தாங்கள் பிறரை வேளை நிறுத்தம் செய்ய சொன்னீர்களே உங்கள் குடும்ப தொலைகாட்சிகளுக்கு விடுமுறை அளித்தீர்களா? எதோ மகளுக்கு செய்தி சென்றடைய வேண்டும் என்ற விருப்பமா? அப்படியென்றால், செய்தி சேனல்களை மட்டும் இயக்கிக்கொண்டு இருக்கலாமே, மாறாக சிரிப்பு சேனல்களிலும், தங்கள் பெயரிலேயே இயங்கும் சேனலிலும் புத்தம் புதிய சிறப்பு திரைப்படம் போடுகிறீர்களே?? மேலும் உங்கள் குடும்ப நெட்வொர்க்கில் இருக்கும் அனைத்து சேனல்களிலும் ஒரே கூத்தும் கும்மாலமும் இடம்பெற்றது ஏன்? ஏன் ஈழ வரலாற்றை தமிழ் மன்னர்கள் அங்கு ஆட்சி செய்ததை தமிழர்களின் இனப் பெருமையை காட்டி இருக்கலாமே என்று கூட கேட்க்கவில்லை தமிழர்களுக்காக ஒரு நிகழ்ச்சியையாவது கொடுதிருக்காமே??

இதுதான் நீங்கள் காட்டும் அனுதாபமா? நீங்கள் கெடுவது மட்டுமின்றி நாடையும் கெடுத்து வைக்கிறீர்களே இது நியாமமா கலைஞர் அவர்களே??

உங்களுக்கு விளம்பர தாரர் முக்கியம், மற்ற நிறுவன முதலாளிகளுக்கு அவர்களுடைய வாடிக்கையாளர்கள் முகியமில்லையா? இதில் உங்களுக்கு இரட்டை ஆதாயம், வருமானத்துக்கு வருமானம், மக்களும் எங்கும் வெளியே சுற்றித் திரிய மாட்டார்கள், அதனால், பந்த் முழு வெற்றி என்று அறிவித்து பெருமை கொள்ளலாம் இல்லையா??

மக்களோ மடையர்கள், நீங்களோ காரியக்காரர் சபாஸ்!!! இதிலிருந்தே தெரிகிறதே உங்களை பற்றி!! சுயநலவாதிகளின் முடிசூடா மன்னன் நீங்கள் வாழ்க!!

இந்த மக்கள் எப்போது இதயெல்லாம் உணரப் போகின்றனரோ அப்போதுதான் தமிழினம் சற்றே மானத்தோடு உலக அரங்கில் நிமிர முடியும்...

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

12 comments:

ஸனு செல்லம் said...

//
இந்த மக்கள் எப்போது இதயெல்லாம் உணரப் போகின்றனரோ அப்போதுதான் தமிழினம் சற்றே மானத்தோடு உலக அரங்கில் நிமிர முடியும்... //
சரியான பதிவு..நன்றி தமிழா....

Anonymous said...

Bandh nadathiya kalainjarukku nanri. Full day ella programmum paarthaen, nallaa rest eduthaen. Indha maadhri adikadi bandh nadandhaa tamil makkalakku sandhoshamthaan. Ilaingayaavadhu mannaavadhu!

தமிழர் நேசன் said...

கேப்டன் ஜெகன் அவர்களே! வாழ்த்துக்களுக்கு நன்றி!

Unknown said...

He is one of the selfish fellow in tamilnadu. I never know he did good things to tamil people.
Writing Tamil Navels will never do good things for tamil people.
He is cheap minister only works for his family.
(i want to write in tamil but it will take more time)

Anonymous said...

குடும்பத் தலைவன்!

Unknown said...

http://urlPass.com/44md

தீப்பெட்டி said...

அவர் தமிழீன தலைவராகி ரொம்ப நாள் ஆகுது பாஸ்.

நாகை சிவா said...

பணம்!

தமிழர் நேசன் said...

//ForFun said...

He is one of the selfish fellow in tamilnadu. I never know he did good things to tamil people.
Writing Tamil Navels will never do good things for tamil people.
He is cheap minister only works for his family.
(i want to write in tamil but it will take more time)
//

தங்கள் உணர்வுகள் புரிகிறது. தமிழில் எழுத முயற்சிக்கலாமே?! எனினும், பின்னூடத்திற்கு நன்றி!

தமிழர் நேசன் said...

நன்றி தமிழினி!

தமிழர் நேசன் said...

//தீப்பெட்டி said...

அவர் தமிழீன தலைவராகி ரொம்ப நாள் ஆகுது பாஸ்.
//

தங்கள் கருத்துக்கு நன்றி!

தமிழர் நேசன் said...

//நாகை சிவா said...

பணம்!
//

வாங்க சிவா! நலமா?! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பல..

Post a Comment