Tuesday, April 28, 2009

மழை நின்றும் தூவானம் விடவில்லை - கருணாநிதி



நேற்று கருணாநிதியிடம் பி.பி.சி செய்தி நிறுவனம் கேட்ட கேள்வி ஒன்றும் அவர் அதற்க்கு அளித்த பதிலும் 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது' போல இருந்தது...

பி.பி.சி : "இலங்கை அரசு அறிவித்ததற்கு மாறாக கனரக ஆயுதங்களை பயன்படுத்துகிறது என்று செய்திகள் வெளியாகிக் கொண்டு இருகிறதே இதை பற்றி உங்கள் கருத்து என்ன?!

கருணா : "இது மழை விட்டும் தூவானம் விடாதது போல" என்று பதிலளித்தார்.


தேர்தல் நாடகத்திற்கு மிகுந்த பாராட்டுக்கள் குவிந்துவிட்டன போலும்! ராஜபக்க்ஷே உண்மையாகவே போரை நிறுத்திவிட்டதாகவும் அதற்க்கு முழு காரணம் தாம் தான் என்றும் கருணாநிதி மனப் பிராந்தியில் இருக்கிறார் போல தெரிகிறது...

பல தசாப்தங்களாக பதவி அதிகாரம் முதலியவற்றை அனுபவித்தும், தன் குடும்பத்தை ஒரு பணக்கார, அதிகாரமைய அமைப்பாக மாற்றிய பின்னும், 85 வயதாகியும் உயிரை விட மனம் வராமல் பல வழிகளிலும் (மந்திரம்; தந்திரம் உள்ளிட்ட) முயலும் ஒரு நபர், இந்த உலகத்தின் எந்த சுகங்களையும் காணாமல் கொத்து குண்டுகளுக்கு கொத்து கொத்தாய் உயிர் துறக்கும் சிறு குழந்தைகளும், பெண்களும், தங்கள் தலை மேல் எப்போது ராட்சத விமானங்கள் குண்டு பொழியும் என்று அச்சத்தில் இறக்கும் வலியை 'தூவானம்' என்று வர்ணிப்பதுதான் தமிழர் நெஞ்சங்களில் கருணாநிதி என்ற ராஜபக்க்ஷே தன் பங்குக்கு போடும் கனரக குண்டு; ஆயுதம் எல்லாம்.

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

3 comments:

Unknown said...

koncham thoovaanam avar kudumbam mel vilunthaal theriyum....

தமிழர் நேசன் said...

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13542&lang=ta&Itemid=107

இந்த சுட்டியில் தோழர் வே.மதிமாறன் அவர்களின் அருமையான பேட்டி. கேட்டக மறவாதீர்கள்..

Anonymous said...

1)மேக்கப் போடாமல் நடிப்பது எப்படி?
2)இத்தாலி சூப் நல்லா இருக்குமா?
3)முதுகு சொரிவது லாபகரமான தொழிலா?
4)பெரியார் மடாலயம்,வீரமணி சாமிகள் தற்போது வாங்கும் குரு தட்சினை எவ்வளவு?
5)மஞ்சள் துண்டு அணிவதால் புதி பிசக வாய்ப்புண்டா?
6)நான் கதை வசனம் எழுதுவேன்:முதல்வராக வாய்ப்புண்டா?

Post a Comment