Wednesday, March 25, 2009

தமிழர்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும்?

இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈழ தமிழர்களை பாதுகாக்க நினைபோர் யாருக்கு ஓட்டு போட வேண்டும்?

ஓராண்டுக்கும் மேலாக நமது தொப்புள்கொடி உறவுகள், ஆண்கள், பெண்கள், கர்ப்பிணிகள், பிஞ்சுக் குழந்தைகள் என பாகுபாடின்றி தினம் 50 - 100 என இலக்கு வைத்து கொல்லப்பட்டு இன்று வரை சுமார் 3000 பேருக்கு மேல் கொடூரமாக கொல்லப்பட்டு வருகின்றனர், இது தொடர்து கொண்டே இருப்பதை கண்டு நம்மில் பலரது மன நிலை ஆரோகியம் குன்றி வருவது உண்மையே!

நம் கண்களுக்கு முன் இத்தகைய கொடுமைகள் நடந்தும், அதை நாம் வரியாக கட்டிய பணத்தை கொண்டே செய்து முடிக்கும் வன்கொடுமையை உணர்ந்தும், ஏதும் செய்ய முடிய வில்லையே என தினம் செய்திகளில் முகம் புதைத்து கண்ணீர் விடும் என்னை போன்ற பல பல தமிழ் நெஞ்சங்கள் தங்கள் நெஞ்சுக்கு நீதி இன்றி தவிக்கின்ற சூழலில் வருகிறது தேர்தல்!!

ஈழ தமிழர் பிரச்சனையில் 'காங்கிரஸ்' தி.மு.க வின் கரங்களை கட்டிபோடுகிறது அல்லது தி.மு.க காங்கிரசை திருப்த்திபடுத்துவதன் மூலம் ஆட்சியை தக்கவைக்கலாம் என்று எண்ணுகிறது. எப்படி வேண்டுமானாலும் வைத்துகொள்ளுங்கள். ஆனால் தி.மு.க மீண்டும் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துவிட்டது, இதை துரதிஷ்ட வசமானது அல்லது சுயநலவாதத்தின் உச்சகட்டம் எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள். இரண்டில் ஏதோ ஒன்று உண்மை.

ம.தி.மு.க ஈழ தமிழர்கள் விசயத்தில் நீண்ட காலமாக (கட்சி தொடங்கிய காலம் முதல்) ஒரு வலுவான நிலைப்பாட்டை, அவர்களுக்கு தனி நாடே தீர்வு என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ள கட்சி. தனது கட்சியின் அங்கத்தினர் பதவி இன்றி இருந்தால் அவர்களை மாற்று(தாய்) கட்சிக்கு எளிதில் இழுத்து விடுவார்கள் என்பதால் மாற்று கருத்துடைய அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்துக்கொண்டாலும், தனது நிலைப்பாட்டிலிருந்து வளைந்து கொடுக்காத கட்சி அல்லது தலைவர்.

பா.ம.க, மாநிலத்தில் - காங்கிரஸ் கட்சியின் ஆதரவில்தான் இனப்படுகொலை நடக்கிறது என்று உண்மையாய் உண்மையை மேடைக்கு மேடை முழங்கினாலும், அதே காங்கிரஸ் கட்சி தந்த மந்திரிப் பதவியை உதர முடியாமல் இருதலை கொல்லி எறும்பு போல உள்ளது அல்லது பதவி ஆசை காரணமாக ஒட்டிக்கொண்டு இருக்கிறது.

விடுதலை சிறுத்தைகள், இவர்களுக்கும் ம.தி.மு.க வுக்கும் ஈழ விசயத்தில் முரண்பாடு இல்லை, ம.தி.மு.க என்ன காரணத்துக்காக அ.தி.மு.க கூட்டணியில் இருக்கிறதோ அதே காரணம்தான் இவர்கள் தி.மு.க கூட்டணியில் இருக்கவும்.

கம்யூனிஸ்டுகள், அப்பாவி தமிழ் மக்கள் சிங்கள அரசால் கொல்லப்படுவதையும் அதற்க்கு 'காங்கிரஸ்' துணை நிற்ப்பதையும் மாநிலத்தில் கண்டிக்கிறது.

தே.மு.தி.க வும், ஈழ மக்களின் மீது கரிசனம் கொண்டு இருப்பதை, மக்களை சந்திக்கும்போது எல்லாம் எடுத்து கூறுகிறது. அதுவும் மதில் மேல் பூனை போல் உள்ளதால் இப்போதைக்கு ஒன்றும் சொல்ல முடியாது.

தமிழகத்தை பொறுத்த வரை இதில் (ஐயா / அம்மா) ஏதோ ஒரு கூட்டணியில் இருந்தால்தான் கட்சியை நடத்த முடியும் என்ற நிலை ஒருபுறம் இருக்கிறது. இதை நாம் மறந்து விட முடியாது. ஏனென்றால், பல வருட காலமாக மாறி மாறி ஆட்சியில் அமரும் அய்யாவும், அம்மாவும், காவல்த்துறை, சட்டத்துறை என முக்கிய இடங்களில் தனி செல்வாக்குடன் இருகிறார்கள், இன்று யாரவது நான் மக்களுக்கு நல்லது செய்கிறேன் எனக்கு ஒட்டு போடுங்கள் என்று கிளம்பினால் என்ன நடக்கும் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும் என்று நம்புகிறேன். (தெரியாதவர்கள் பின்நூட்டமிடவும் நான் சொல்கிறேன்!)

'காங்கிரஸ்' - இவர்களுக்கு ஈழம் என்றால் நினைவுக்கு வருவது ராஜீவ் கொலை மட்டுமே. அதை தாண்டி எதையும் யோசிக்க தயாராகாதவர்கள், தினம் தினம் தன் இன மக்கள், அப்பாவி மக்கள், தங்கள் கட்சி தலைமையின் தவறான பார்வையினால் கொல்லப்படுகின்றனர் என்பதை உணர மறுப்பவர்கள்.

இந்த பேரவலத்தை தடுத்து நிருத்தச் சொல்லி மத்தியில் உள்ள தங்கள் கட்சி தலைமையினை மன்றாடி கேட்கும் தார்மீக பொறுப்பில் தாங்கள் இருப்பதை முற்றாக மறந்து விட்டு, தங்கள் தலைவியின் கண்கள் மறைக்கப்பட்டு இருந்தால், உண்மையை அவர்(சோனியா) விளங்க உதவுவதை விட்டுவிட்டு, பிச்சைக்கார பதவிக்காக தங்கள் தாயின்(தமிழ்) இரத்தத்தையும் விற்க துணிந்தவர்கள்.

இந்திய மக்கள் சுதந்திரம் வாங்கித்தந்த கட்சி என்ற அடிப்படையில் போடும் ஓட்டுக்களை பொருக்கி அதில் சுகம் கண்டு பழகிய மூடர்கள். பதவியை தக்க வைக்க சொந்த இன மக்களையே புறம்தள்ளி டில்லியில் உள்ள பெரும் தலைகளின் கால்களை பூஜிக்க போட்டி போடுபவர்கள். தங்கள் கட்சியின் உண்மைத்தொண்டன் தீகுளிப்பதை பற்றி சிறிதும் கவலை இன்றி, தலைவிக்கு ஒத்து ஊத சண்டை போட்டுக்கொள்ளும் முட்டாள்கள்.

ஆக, ஈழ தமிழ் மக்களின் துயரம் கண்டு, தங்கள் தொப்புள்கொடி உறவுகளாய் இருந்தும் எந்த ஒரு உதவியும் செய்ய முடியவில்லையே என்று ஏங்கும் ஒவ்வொரு தமிழனும் - "யாருக்கு ஓட்டு போடுவது"?

நம் கையில் இருக்கும் ஒரே ஒரு ஆயுதம் 'வாக்குரிமை' மட்டும் தான். ஆம், பிற ஜனநாயக உரிமைகள், குறிப்பாக 'பேச்சுரிமை' நமக்கு இருக்கிறதா? முற்காலத்தில் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தது, இப்போதும் செய்கிறது இதை சொன்னால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிறது.

நடக்கும் உண்மையை பேசியதர்க்கே இப்போது மூன்று பேரை சிறையில் அடைத்திருக்கிறது நம் அரசு! இவர்களுக்கு ஓட்டு போட்டு அதிகாரம் அளித்த நமக்கு, "என் பணத்தை கொண்டு நான் கொடுத்த அதிகாரத்தை கொண்டு என் வாசல் வழியே ஆயுதம் தந்து, என் சகோதர சகோதரிகளையே கொள்கிறாயே, இது நியாயமா?" என்று கேட்டால், தேச துரோகமா சிறை தண்டனையா?!

சரி எப்படியோ 5 வருடம் முடிந்து மீண்டும் நமக்கு கிடைத்துள்ள வாக்குரிமையை அவர்கள் நம்மிடம் கேட்டு வரப் போகிறார்கள். இப்போது உள்ள கூட்டணி சூழ்நிலையில்...

  • அனைவரும் ஓட்டு போட வேண்டும்.
  • உண்மையான தமிழன் என்று தன்னை நினைக்கும் ஒவ்வொருவரும் எக்காரணம் கொண்டும் காங்கிரஸ் கட்சிக்கு 'ஓட்டு' போடவே கூடாது.
  • தாங்கள் மனிதாபிமானி, மிதவாதி, வன்முறைக்கு எதிரானவர்கள் என்றுஅடையாளப் படுத்திகொள்ளும் ஒவ்வொரு இந்தியனும், 'மனிதாபிமானமேஇன்றி அப்பாவி மக்களை தினம் கொள்ளும் இலங்கை இனவாத அரசுக்கு' ஆதரவளிக்கும் காங்கிரஸ் கட்சியை புறக்கணிக்க வேண்டும்.
  • அயல் நாட்டு மண்ணில் தன் இன விடுதலைக்காக போராடும் ஒரு விடுதலைஅமைப்பை நசுக்க முன்னுரிமை கொடுத்து, தன் சொந்த நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவித்த (மும்பை தாக்குதல்) பொறுப்பற்ற காங்கிரஸ் அரசைஒவ்வொரு இந்தியனும் தோற்கடிக்க வேண்டும்.
  • காங்கிரசை தவிர்த்து நீங்கள் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் ஓட்டுபோடலாம், போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் காங்கிரஸ் மண்ணைக்கவ்வ வேண்டும். ஈழ மண்ணில் இறந்த ஒவ்வொரு குழந்தை உயிருக்கும் இவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும்.
  • இனப் படுகொலை செய்ய துணையிருந்த காங்கிரஸ் கட்சி, மீண்டும் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட 'டெபாசிட்' வாங்க முடியாமல் போனது என்று வரலாறு சொல்ல வேண்டும். இது பிற கட்சிகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.
  • அதுமட்டுமல்ல நண்பர்களே! நாம் ஒவ்வொருவரும் நமக்கு தெரிந்தநண்பர்களிடமும், உறவினர்களிடமும், இயன்ற அனைத்துவாக்காளர்களிடமும் காங்கிரஸ் கட்சியை புறக்கணிக்க வற்ப்புருத்தவேண்டும். இது நம் ஒவ்வொருவராலும் செய்ய முடிந்ததே. இது தான் மிக மிகமுக்கியம், வார இறுதி நாட்களில் நம் ஓய்வு நேரத்தில் இதை செய்தால் கூட, ஓரளவுக்கு நமது மனிதாபிமான கடமையை செய்தவர்களாவோம்.

"'அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம்' என்னும்,
பல்
அவையோர் சொல்லும் பழுது அன்றே - பொல்லா
வடுவினையே
செய்த வய வேந்தன் தேவி!
கடு
வினையேன் செய்வதூவும் காண்."

இது சிலப்பதிகாரத்தில், அரசனால் (கவனக்குறைவால்) வஞ்சிக்கப்பட்ட கண்ணகி மொழிவது. இன்று தெரிந்தே பல உயிர்களை கொள்ளும் இந்த அரசு என்ன செய்ய போகிறது?! கண்ணகிக்காக சிலை வைத்தவருக்கு இது புரியாமல் போனது தான் காலக் கொடுமை.

குறிப்பு : இந்த பதிவை யார் வேண்டுமானாலும் மீள் பிரசுரம் செய்து அவர்கள்வலையில் பதிவிட்டுக் கொள்ளலாம்.

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

10 comments:

மோனி said...

காலம்
மிகச்சிறந்த போதகர் ...

இந்த தேர்தலில்
காங்கிரஸ் நிச்சயம் உணரும்...

நாகை சிவா said...

நல்ல வாதங்களை முன்னெடுத்து வைத்து உள்ளீர்கள் தமிழர் நெசன் !

கோவி.கண்ணன் said...

//உண்மையான தமிழன் என்று தன்னை நினைக்கும் ஒவ்வொருவரும் எக்காரணம் கொண்டும் காங்கிரஸ் கட்சிக்கு 'ஓட்டு' போடவே கூடாது.//

வழிமொழிகிறேன். தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்

தமிழர் நேசன் said...

வாங்க நாகை சிவா!
தங்கள் கருத்துக்கு நன்றி! உங்கள் பின்னூட்டம் பார்க்கும் பொழுது உற்சாகம் பிறக்கிறது.
நன்றி!

தமிழர் நேசன் said...

இந்த பதிவு அனைவருக்கும் பொய் சேர வேண்டும் என்பது தான் என் எண்ணம், தயவு செய்து தங்கள் வாக்குகளை தமிழிஷ் மற்றும் தமிழ் மனத்தில் பதிவு செய்யவும்..

தமிழர் நேசன் said...

இந்த பதிவு அனைவருக்கும் போய் சேர வேண்டும் என்பது தான் என் எண்ணம், தயவு செய்து தங்கள் வாக்குகளை தமிழிஷ் மற்றும் தமிழ் மனத்தில் பதிவு செய்யவும்..

பழமைபேசி said...

சரிங்க!

தமிழர் நேசன் said...

நன்றிங்க!

M.A.Ajoydhas said...

இந்த தேர்தல் காங்கிரஸ் மட்டும்மில்லாமல், நாங்க ஆட்சிக்கு வந்தா ஓசில அத கொடுப்போம் இத கொடுப்போம்னு சொல்லற கட்சிக்கும், எதுகேடுதாலும் கால்ல விழுற கட்சிக்கும் கண்டீப ஒட்டு போடா கூடாது. நான் சொல்லறது சரிதானா சிவா.

தமிழர் நேசன் said...

மிக்க சரி நண்பரே!

Post a Comment