Thursday, March 5, 2009

காந்தியின் தேசமே, விவசாய நிலங்களை காப்பாற்றுங்கள்!



இன்று காந்தியின் பொருட்களை ரூ. 9.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்தார் இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா. இவர் சாராய சாம்ராஜியத்தின் மன்னன் என்று கூறப்பட்டாலும், நமது நாட்டின் பெருமையை விலைபோகாமல் காப்பாற்றியதற்காக இவரை நான் பாராட்டுகிறேன். ஆனால், அந்த பொருட்களை வைத்திருந்த ஜேம்ஸ் ஓடிஸ் எழுப்பிய கோரிக்கைகள் நம்மை சிந்திக்க வைத்துள்ளன.

"ஓடிஸ் இந்திய அரசு பட்ஜெட்டில் ராணுவ செலவுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு பதிலாக, ஏழைகளின் சுகாதார வசதிகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்" என்ற ஒரு கோரிக்கையை வைத்திருந்தார்.

இதில் உள்ள உண்மையை நாம் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்துமே பாதுகாப்பு துறைக்காக தங்களது மொத்த உற்ப்பத்தியில் பெரும் பகுதியை செலவிடுகின்றன. இருப்பினும்
காந்தி
- அகிம்சை போதித்த இந்தியா பல விதமான பிரச்சனைகளுக்கும், வன்முறைகளுக்கும், அவற்றின் வேராக இருக்கும் காரணிகளை கண்டு பிடித்து அதற்க்கு தீர்வு காணாமல், கண் மூடித்தனாமாக பாதுகாப்பை அதிகரித்துக்கொண்டே சென்றால், ஒவ்வொரு குடி மகனுக்கும், ஒரு பாதுகாவலர் என்ற நிலைக்குத்தான் வழி வகுக்கும்.

அதே போல, அரசு 40 சதவீகம் கல்வி அறிவு இல்லாதவர் இருக்கும் இந்திய தேசத்தில் படிப்பை வளர்க்க பயன் படுத்தும் தொகை இந்தியாவின் மொத்த உற்ப்பத்தியில் வெறும் 3.5% தான். ஆனால், சர்வதீச நாடுகளை எடுத்துக்கொண்டால், 4.9% ஆகவும், வளரும் நாடுகளில் 3.8% ஆகவும் உள்ளது.
அதே போல, சுகாதாரம் மற்றும் மருத்துவத்திற்கு 0.7% மே ஒதுக்கப்படுகிறது. இது சர்வதேச அளவில் 3.2% ஆகா உள்ளது!

இந்திய அரசு இது போலவே, வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கும், விவசாயிகளுக்கும் (அவர்களின் பயிர் கடன் வட்டியை தள்ளுபடி செய்யவும்)
பல
ஆயிரம் கோடிகளை ஒதுக்குவதாக கூறுகிறது. ஆனால், அந்த தொகை, போய் சேர வேண்டிய கிராம புற ஏழை மக்களுக்கு சென்றடைகிறதா என்றால் இல்லை! (விவசாயிகளை கேட்டால், விவசாய கூட்டுறவு வங்கிகளில் முதலில் கடனே தருவதில்லை என்றும் பாதி நாட்கள் இந்த வங்கிகள் பூட்டியே கிடக்கிண்டறன என்றும் வாங்காத கடனுக்கு வட்டி தள்ளுபடி செய்தால் என்ன அசலை தள்ளுபடி செய்தால் என்ன என்று கேட்கின்றனர்?!). காரணம் தேசமெங்கும் பரவிக்கிடக்கும் ஊழல், லஞ்சம், இன்னும் பிற...



இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றார் மஹாத்மா காந்தியடிகள். ஆம் நாஞ்சில் நாடன் அவர்கள் சொன்னதைப் போல, கிராமங்களில், விவசாயமாக, கைத்தொழிலாக, தொன்மையான சடங்குகளாக, நாட்டுவைத்தியமாக, சிறு தெய்வங்களாக, நாட்டார் கலையாக, விருந்தோம்பலாக, ஆசாபாசங்கள் நிறைந்த அன்பாக, சிற்றோடைகளாக, வால் உயர்த்தித் திரியும் கன்றுகளாக, நாவற் பழ மரங்களாக, குப்பை மேனிச் செடிகளாக, ஒற்றையடிப் பாதைகளாக வாழ்கிறது.

ஆனால் இந்த கிராமங்களின் உயிர் மூச்சாக இருக்கும் விவசாயத்தை நமது ஆட்சியாளர்கள் எவ்வாறு கவணிக்கின்றனர்??



"கிராமங்களிலிருந்து சென்னை , கோவை , திருப்பூர் போன்ற நகரங்களுக்கு வேலை தேடி வருவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதில் நூற்றுக்கு தொன்னூறு பேர் விவசாயிகள். காரணம் விவசாயம் லாபகரமானதாக இல்லை. அதற்கான மாற்றுத்திட்டங்கள் ஏதும் முன்மொழியப்படவில்லை". இவ்வாறு நண்பர் மதிபாலா தனது அற்ப்புதமான கட்டுரையில் சொல்லியிருந்தார். உண்மையிலும் உண்மை.. இது தொடர்பில் என்னுடைய சில கருத்தையும் பதிவு செய்ய விரும்பி இதை எழுதுகிறேன்.

எனக்கு தெரிந்த ஒரு விவசாயி ஒரு முறை சொன்னார், "இப்போது நாங்கள் எதிர்நோக்கும் பிரட்ச்சனை எல்லாவற்றிலும் பெரியது வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறைதான், தோட்ட வேலை செய்ய ஆட்கள் வராததால், பலர் விவசாயத்தை கைவிட்டு, தங்கள் விவசாய நிலங்களை சொற்ப விலைக்கு விற்று விட்டு கிடைக்கும் பணத்தை வைத்து நாட்க்களை கடத்த வேண்டிய சூழலில் இருக்கின்றோம்".

மதிபாலா நீங்கள் சொல்வதை போல் பெரு நகரங்களுக்கு இடம் பெயரும் விவசாயிகள் மட்டும் அல்ல. தங்கள் கிராமங்களிலும் விவசாய தொழிலாளர்கள் விவசாயத்தை கைவிட்டுவிட்டு, அரசாங்கம் அறிவித்திருக்கும் கிராம புற வேலை வாய்ப்பு திட்டத்தை நோக்கி சென்றுவிட்டனர். இதன் மூலமாக கிடைக்கும் கூலி விவசாய வேலை செய்வதை விட சற்று அதிமாக இருக்கிறது அதனால் வயக்காடுகளில் கஷ்டப்படுவதை விட இந்த திட்டத்தில் குறைவான வேலை செய்து கிடைக்கும் கூலியை தொழிலாளர்கள் விரும்புகின்றனர்.

மேலும், விவசாயம் செய்பவர்கள், தாங்கள் விளைவித்த பொருட்களை விற்கும் பட்சத்தில் கிடைக்கும் லாபம் மிகவும் சொர்ப்பமாதாக இருக்கிறது என்ற கவலையை தெரிவிக்கின்றனர். உதாரணமாக கரும்புக்கு அரசு நிர்ணயித்துள்ள விலை போதுமானதாக இல்லை, காய் கறிகளை பயிரிடுவோர் தங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் இடைத்தரகர்களிடம் மிக மிக குறைந்த தொகையையே பெற முடிகிறது..
ஆனால், இடைத்தரகர்களோ, அதை பெரும் லாபங்களுக்கு கை மாற்றி விடுகின்றனர்.



இதை தடுப்பதற்கும் அரசு எந்த உருப்படியான நடவிடிக்கையும் எடுக்கவில்லை. இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது யாதெனில், விவசாய பண்டங்கள், அதை விளைவிக்கும் விவசாயிக்கு பயனளிக்கும் வகையிலும் லாபம் அடையும் வகையிலும் இருந்தால், விவசாயக் கூலியை அதிகரிக்கலாம், தொழிலாளர்கள், ஆர்வத்துடன் வருவார்கள், இந்த தொழிலை செய்ய இளைஞர்கள் முன் வருவார்கள், விவசாய நிலங்களை அழியாமல் காப்பாற்றலாம், நாடு செழிக்கும்.
அதை விடுத்து வேலை வாய்ப்பு தருகிறேன் என்று (நோயின் காரணத்தை அறிந்து மருந்து கொடுக்காமல், அந்த நோய் ஏற்ப்படுத்தும் வலிக்கு, வலி நிவாரணி மூலம் தீர்வுகாண்பதை போல்) விவசாயத்தை நசுக்கினால், ஒரு நாள் அந்த நோய் புரைஓடி உயிரைக்கொல்லும்.

இதற்கெல்லாம் காரணம், விவசாயிகளின் உண்மை பிரட்ச்சனையை உணர்ந்து நீக்காமல், மேம்போக்காக சில திட்டங்கள் மூலமும், கவர்ச்சி திட்டங்கள் மூலமும், ஓட்டு எண்ணிகையை பெருக்கவே ஆட்சியாளர்கள் முனைவது தான்.

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

11 comments:

ஷங்கர் Shankar said...

நான் இந்த பதிவை எனது ப்ளாகில் போடலாம் என்று இருக்கிறேன். தங்கள் அனுமதி வேண்டுகிறேன் - shankard@oneindia.in

butterfly Surya said...

அருமை.

தொடரட்டும் உமது பதிவுகள்.

பழமைபேசி said...

அழகான் படங்களுடன், ஆக்கப்பூர்வமான கட்டுரை! தொடருங்கள்!!

nagai said...

முக்கியமான கவலை....பல காரண்ங்கள் ஆள் பற்றாக்குறை ,விலை கிடைக்காமல் இருப்பது ,நிலங்கள் நல்ல விலைக்கு விற்பது .....சரியான ஆட்சியர்கள் நமக்கு கிடைக்கவில்லை காமராஜர் போல...நம் சந்நதியர்கள் பாவம்........

Unknown said...

//இதில் உள்ள உண்மையை நாம் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்துமே பாதுகாப்பு துறைக்காக தங்களது மொத்த உற்ப்பத்தியில் பெரும் பகுதியை செலவிடுகின்றன. இருப்பினும்
காந்தி - அகிம்சை போதித்த இந்தியா பல விதமான பிரச்சனைகளுக்கும், வன்முறைகளுக்கும், அவற்றின் வேராக இருக்கும் காரணிகளை கண்டு பிடித்து அதற்க்கு தீர்வு காணாமல், கண் மூடித்தனாமாக பாதுகாப்பை அதிகரித்துக்கொண்டே சென்றால், ஒவ்வொரு குடி மகனுக்கும், ஒரு பாதுகாவலர் என்ற நிலைக்குத்தான் வழி வகுக்கும்//
மறுக்க முடியாத உண்மை !

sakthi said...

arumayana katturai
thodaratum ungal pathivu
valthukkal

தமிழர் நேசன் said...

//ஷங்கர் Shankar said...

நான் இந்த பதிவை எனது ப்ளாகில் போடலாம் என்று இருக்கிறேன். தங்கள் அனுமதி வேண்டுகிறேன்//

ஷங்கர் அவர்களே, தாமதமான விடைக்கு மன்னிக்கவும். இந்த கட்டுரையை நான் எழுத கருவாய் இருந்தது இந்த சமூகம், எந்த வயல் வெளிகளை, எந்த கன்றுக்குட்டிகளை, எந்த மண் வளங்களை, கண்டு, ரசித்து, அவற்றை காக்க வேண்டும் என்ற தணியாத உந்துதலால் இந்த கட்டுரையை எழுதினேனோ, அதற்க்கு பயன், இது பலரை சென்று அடையும் போதுதான் பிறக்கும். நீங்கள் தாராளமாக மீள் பிரசுரம் செய்யலாம்.

உங்கள் ஆர்வத்திற்கு நன்றி.

தமிழர் நேசன் said...

அனைவரும் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். சென்னையில் இருந்து சற்று விடுபட்டு எனது சொந்த ஊருக்கு சென்று வந்தேன். அதனால் தான் இந்த தாமதம்.

வண்ணத்துபூச்சியார் : எனது வலைக்கு வந்து எப்போதும் ஊக்கமளிப்பவர், உங்கள் ஊக்கம் எனது ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது. (இவர் பதிவில், ஐரோப்பிய படங்களுக்கு திரை விமர்சனம் எழுதியிருக்கிறார். அங்குள்ள படங்களின் தரம் மற்றும் கதையின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள நல்ல பதிவுகள். சென்று பாருங்கள்.) நன்றிகள்.

பழமை பேசி : எனது இனிய நண்பராகி விட்டவர், தேடி தேடி பதித்த படங்களை வாழ்த்தியிருக்கிறார். நன்றிகள்.

அஸ்வத்: பதிவுகளை படித்துமட்டும் வந்தவர், புதிய வலையை தொடங்கி எமக்கு பின்னூட்டமிட்டுள்ளர். நன்றிகள்.

ஆகயமனிதன்: skyuvaraaj. பெயரிலேயே ஆகாயத்தை வைத்துள்ளார். உங்கள் கருத்துக்கு நன்றி.

சக்தி: தொடர்ந்து இனிமையான கவிதைகளை மட்டுமல்ல தமிழர்களின் மீதுள்ள அன்பையும் பதிவு செய்து வருகிறார். எனது வலைக்கு வந்ததற்கு நன்றி.

ஷங்கர் Shankar said...

\\ ஷங்கர் அவர்களே, தாமதமான விடைக்கு மன்னிக்கவும். இந்த கட்டுரையை நான் எழுத கருவாய் இருந்தது இந்த சமூகம், எந்த வயல் வெளிகளை, எந்த கன்றுக்குட்டிகளை, எந்த மண் வளங்களை, கண்டு, ரசித்து, அவற்றை காக்க வேண்டும் என்ற தணியாத உந்துதலால் இந்த கட்டுரையை எழுதினேனோ, அதற்க்கு பயன், இது பலரை சென்று அடையும் போதுதான் பிறக்கும். நீங்கள் தாராளமாக மீள் பிரசுரம் செய்யலாம்.

உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. \\

அனுமதி அளித்ததற்கு மிக்க நன்றி!

எனது பதிவு - Prevention in Agriculture - விவசாய நிலங்களை காப்பாற்றுங்கள்!

மதிபாலா said...

நண்பர் தமிழ்நேசன் ,

உங்கள் இந்தக்கட்டுரைக்கும் , நான் சொல்லவந்த கருத்தைப் பற்றிய தெளிவான புரிதலுக்கும் நன்றிகள். முதலில் நமது அரசுகளின் தற்போதைய செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன???
சளி , காய்ச்சலுக்கு மருந்து கொடுப்பார்களே மருத்துவர்கள் , அதுபோலத்தான் அரசுகளும்.

விவசாயக் கடன் தள்ளுபடி , விவசாயத்திற்கு இலவச மின்சாரம் என்று கவர்ச்சிகரமான திட்டங்களைப் போட்டு ஓட்டுக்களை அள்ளுவதே அவர்கள் நோக்கம்.

நாம் சொல்வதெல்லாம் வருமுன் காத்தலே சிறந்தமருந்து என்பதைத்தான். சுகாதார குடிநீரும் , சுத்தமான சுற்றுப்புறமும் சளியையும் , காய்ச்சலையும் தடுக்கும். ஆக , பிரச்சினையின் ஆணி வேரைப்பற்றிய கவலையே இன்றி இலவச மருத்துவ முகாம்கள் மூலம் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்வதே இவர்கள் நோக்கம்.

அதுபோலவே லாபகரமான விவசாயம் இருந்தால் உங்கள் கடன் தள்ளுபடியும் , இலவச மின்சாரமும் தேவையே இல்லை......!!!

ஆகவே விவசாயத்தை லாபகரமானதாக மாற்றுவதில் தான் அரசுகளின் கவனம் இருக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும்......!!!

தமிழர் நேசன் said...

மதுவை ஒழிக்க வேண்டும் என்று காலமெல்லாம் பாடுபாட்ட காந்தியின் பொருட்களை ஒரு சாராய சாம்ராட்தான் மீட்க முடிந்திருக்கிறது என்பதுதான் நகை முரண்.

Post a Comment