Monday, May 11, 2009

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் இலங்கையை கண்டித்துள்ளார் : காணொளி

டேவிட் மில்லிபான்ட் கடந்த மூன்று நாட்களாக நடந்துவரும் மனித படுகொலைகளை வன்மையாக கண்டித்துள்ளார். அவர் பேசிய காட்சி இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது.




> ஐ.நா.வின் பேச்சாளரான கோர்டன் வைஸ் அவர்கள் இலங்கையில் எதிர்பாத்த இரத்தக்குளியல் "blood Bath" நடந்து விட்டது என்று கூறியதை சுட்டிக்காட்டிய மில்லிபான்ட், பெரும் தொகையான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை தாம் வன்மையாக கண்டிப்பதாக கூறினார்.

> கடந்த சனிக்கிழமை தொடக்கம் திங்கள் வரை நீடித்த கடும் தாக்குதல்கள், அங்கு பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது என்றும் இது தொடர்பாக தாம் போகல்ல கமாவிடம் பேசியதாகவும், கொலைகள் நிறுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் கூறினார்.

(கவனிக்க : பிரித்தானிய அமைச்சர் கண்டிக்கின்ற அளவுக்கு படுகொலைகள் நடந்த அதே நாளில் இங்கு 20 மைல் தொலைவில் உள்ள நம்மிடம் நமது தமிழ் காவலர் கலைஞர், இத்தாலி அன்னை சூனியா இருவரும் 'தங்கள் முயற்சியால் தான் போர் நின்றது' என்று கூறியது - நம்மை எவ்வளவு முட்டாள்கள் என்று அவர்கள் எண்ணுகிறார்கள் என்பதை உணர்த்தும்!)

> மேலும், அவர் இந்த போரை சாட்சி இன்றி நடக்கும் போர் "war without witness" என்று வர்ணித்துள்ளார். அவர் இது தொடர்பாக N.G.O மற்றும் பாதுகாப்பு சபை உறுப்பினர்களுடன் பேசவிருப்பதாக கூறினார்.

> பிரித்தானிய நிருபர் நாடு கடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த மில்லிபான்ட், இலங்கை என்ன செய்ய வேண்டுமோ அதற்க்கு எதிராக நடந்துகொள்கிறது என்று சாடினார். அதாவது நிருபர்களையும் சர்வதேச கண்காணிப்பாளர்களையும் அனுமதித்து ஐ.நா உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் கண்காணிப்பு அனுமதிக்கப்பட வேண்டும் அனால் அதற்கு மாறாக நிருபர்களை நாடுகடத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.

> இலங்கையின் இந்த போக்கு பாதுகாப்பு சபை உறுபினர்களை கவலை கொள்ள செய்துள்ளதாகவும், ஐ.நா இலங்கை விவகாரங்களை பற்றி தெரிந்து கொள்வது மட்டுப்படுத்தபடுவது ஒரு பெரும் பின்னடைவாக உள்ளது என்றார்.

> முக்கியமாக சர்வதேச நாணய நிதியம் மறுவாழ்வுக்காக அளிக்கும் நிதியை இலங்கை எப்படி பயன்படுத்துகிறது என்பதை பிரிடன் கூர்ந்து கவனிக்கும் என்றும் கூறினார்.

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

No comments:

Post a Comment