Tuesday, May 19, 2009

இங்கிலாந்தில் பயங்கரவாதி இந்தியாவில் தியாகி......


உதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே.......இவன் பகத் சிங்கின் தோழன்.

1919 இல் ஜாலியன் வாலாபாக் படு கொலை நிகழ்கிறது. படுகொலையை நிகழ்த்தியது மேஜர் டயர் இ படுகொலை செய்ய சொன்னது அதாவது உத்தரவு இட்டவனின் பெயரும் டயர் (Michael O'Dwyer) ஆம் இவன் மேஜர் டயரின் உயர் அதிகாரி.

இந்த படுகொலையின் போது அங்கு தண்ணீர் பரிமாறி கொண்டிருந்த சில இளைஞர்களில் ஒருவன்தான் உதம் சிங். குருதி தோய்ந்த மண்ணை தன் சட்டை பையில் சேகரித்து வைத்து கொண்டு தாக்குதல் செய்ய சொன்னவனை (அம்பை எய்தியவனை - Michael O'Dwyer) பழி வாங்க துடிகிறான். ஆகையால் இரண்டு மாதங்களாக அவனை தேடி அலைகிறான். ஆனால் அதன் பின்னரே உதம் சிங்குக்கு தெரிய வருகிறது Michael O'Dwyer மாற்றல் ஆகி இங்கிலாந்துகே சென்று விட்டான் என்று.

துவள வில்லை உதம் சிங்இ அதே ஆண்டு அவனை தேடி இங்கிலாந்துக்கு பயணம் அடைகிறான். இங்கிலாந்து சென்று சர்வர் வேலை போன்ற சிறு சிறு வேலைகள் செய்து கொண்டே Michael O'Dwyer ஐ தேடுகிறார். ஒரு ஆண்டு அல்ல இரண்டு ஆண்டு அல்ல... 21 ஆண்டுகள் தேடி கடைசியாக 13-ஆயச-1940 ஆண்டு ஒரு பொது விழாவில் கண்டு பிடித்து Michael O'Dwyer ஐ கொள்கிறான். மேலும் அந்த விழாவில் இருக்கும் 3 உயர் அதிகாரிகளை நோக்கியும் சுடுகிறார் அவர்கள் மூன்று பெரும் படுகாயமடைந்து (Lord Zetland, Luis Dane and Lord Lamington) பிழைத்து கொள்கிறார்கள்



மூன்று மாதங்களில் விசாரணை முடிந்து உதம் சிங்கை தீவிரவாதி என்று இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்து அவருக்கு மரண தண்டனை அளித்து... உதம் சிங்கை 31-துரடல-1940 இல் தூக்கில் இடுகிறார்கள். இறப்பதற்கு முன் உதம் சிங் சொல்கிறார் என் நாட்டில் வந்து 400௦௦ மக்களை கொன்றதற்கு நான் அவனை கொன்றது மிக சரியே என்று சொல்லி தூக்கு கயிற்றை முத்தமிடுகிறார்.

பிறகு 1974 இல் இந்திரா காந்தி பிரதமாராக இருக்கும் போது உதம் சிங்கின் எச்சங்கள் இந்தியா கொண்டு வரப்பட்ட எரிக்கப்பட்டு அவருடைய அஸ்தி கங்கையில் கரைக்க படுகிறது. அவருடைய உடல் பிரதமர்இ ஜனாதிபதி மற்றும் முதல்வர் அனைவரும் அஞ்சலி செலுத்தி அவரை தியாகி என்று புகழ்ந்துரைகிறார்கள்.

சரி இப்பொழுது விடயத்திற்கு வருவோம்.................

400௦௦ பேரை நம் மண்ணில் கொன்றதற்காக உதம் சிங் இங்கிலாந்து சென்று Michael O'Dwyer கொன்றதனால் தியாகி என்கிறோம் நாம்.....

ஆனால் இங்கிருந்து ராஜிவி காந்தியின் உத்தரவின் பேரில் இந்திய அமைதி படை இங்கிருந்து ஈழத்திற்கு சென்று 5400௦௦ பொது மக்களை மற்றும் 800௦௦ பெண்களை கற்பழித்து கொன்றதற்கு சுபா இங்கு வந்து ஒருவனை கொன்றாலே அது தவறா?

"ஒரு பெண் தன் கற்பை காப்பற்றி கொள்ள தன் நகங்களை ஆயுதமாக பயன் படுத்தி எதிரியை கொல்லலாம் மற்றும் என் சகோதிரியின் கற்பு பரி போகும் போது நிச்சயமாக் என்னால் அகிம்சையை கடை பிடிக்க முடியாது"
- மகாத்மா காந்தி

400 மக்களை கொன்றதற்கு உதம் சிங்கிற்கு இவ்வளவு வெறி வருமானால்.....

அதை விட 15 மடங்கு அதிகமான மக்களை (400 பேர் எங்கே - 6200 பேர் எங்கே) இந்திய அமைதி படை கொன்றதற்கு ஈழ தமிழனுக்கு எவ்வளவு வெறி வர வேண்டும்..... வந்தது.

பின் அவர்கள் செய்தால் மட்டும் குற்றமா?

அவர்கள் செய்தால் தீவிரவாதி பட்டம்... நாம் செய்தால் தியாகி பட்டமா?

நல்ல நியாம்டா சாமி.............

சிறிது கூட விடுதலை உணர்வு என்றால் என்ன அல்லது இன பற்று என்றால் என்ன என்று தெரியாத பதவிக்காக ழூழூ தின்னும் மனிதர்களுக்குஇ இந்த நியாங்கள் அனைத்தும் எங்கே புரிய போகிறது.......

ஆனால் ஒருவருக்கு புரிந்தது.....

''ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படையில் பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங்கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார். இலங்கைக்குப் போன படை இந்தியா திரும்பியவுடன்இ யோணன் சிங்குக்கு வீர சர்க்கார் விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த செய்தியை தன் அப்பாவிடம் தெரிவித்த யோணன்இ விருது விழாவுக்கு அவரையும் அழைத்திருக்கிறார்.

ஆனால் ரன்பீர் சிங்கோஇ 'இன விடுதலையை அடக்குவதற்காகக் கொடுக்கப்படும் விருதை நான் வீர விருதாகவே கருத மாட்டேன். அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர வேண்டாம். அந்த விருதை நீ வாங்கினால்இ நமக்குள் எந்த உறவும் இருக்காது' என்று சொல்ல...

யோணன் அந்த விருதையே புறக்கணித்திருக்கிறார்!''


ரன்பீர் சிங் ஒன்றும் தமிழர் இல்லையே..... பிறகு எப்படி ரன்பீர் சிங்கிற்கு புரிந்த ஈழ போராட்டத்தின் நியாயம் இங்கு இருக்கும் ஏராளமான தமிழகம் மற்றும் இந்திய நாதரிகளுக்கு புரிவதில்லையே ஏன்?

ஏன் எனில் அந்த நாதரிகளுக்கு சுதந்திரம் என்பது ஓசியில் கிடைத்தது மற்றும் அடிமை வாழ்கை என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியாது................

மேலும் ஒரு விஷயத்தை சொல்கிறேன்....................

1981 October 31 இந்திரா காந்தி அவரது பாது காவலலார்கலாலே சுட்டு கொல்லபடுகிறார். அவர்களுடைய பெயர் Satwant Singh மற்றும் Beant Singh. அதாவது இந்தியாவின் பிரதமரை தன் உயிரை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டிய இந்தியா ராணுவ வீரர்களே தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக சுட்டு கொள்கிறார்கள்.

இந்திரா காந்தியை கொன்றவர்களில் ஒருவன் அப்பொழுதே கொல்லப்டுகிறார்.... மற்றொருவன் மூன்று ஆண்டுகள் கழித்து கொல்லபடுகிறான். சீக்கிய குருமார்கள் இந்திரா காந்தியை கொன்றவர்களை சீக்கிய இனத்தின் தியாகியாக அறிவித்து இருகிறார்கள்!!!!

இப்பொழுது இந்திய அரசு ( காங்கிரஸ் ) என்ன செய போகிறது...

பிரதமரை கொன்றவனை தியாகிகள் என்று அறிவித்த இனத்தை தீவிரவாத இயக்கம் என்று சொல்லி தடை செய்திருக்க வேண்டாமா? ஏன் செய்ய வில்லை மாறாக அவர்களுக்கு பிரதமர் பதவி கொடுத்து அழகு பார்கிரிர்கலே அது ஏன்?

அப்படி எனில் ராஜிவ் காந்தியை கொன்றது சுபாதானே?

சுபாதான் அப்பொழுதே இறந்து விட்டாலே...

அதோடு சுபா கூட இருந்த ஐந்து பேரும்(ஒற்றை கண் சிவராசன் – உட்பட) பெங்களூரில் உள்ள வீட்டில் சயனைடு சாபிட்டு இறந்து விட்டார்களே பின் ஏன்?

இந்த வழக்கில் மேலும் நளினிஇ பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியார் 17 ஆண்டுகளுக்கு மேல் தனிமை சிறையில் வாடுகின்றனரே அது ஏன்?

இதற்கு மேலும் விடுதலை புலிகளுக்கு மட்டும் தடை ஏன்???

இங்கு பிரபாகரன் பெயரை சொன்னாலே தேசிய பாதுகாப்புக்கு சட்டம் பாயுமாம்....... (NSA)

ஆனால் சீக்கிய மடம் இந்திரா காந்தியை கொன்றவனை தியாகி என்கிறது..... !!!!!!

எதெற்கெடுத்தாலும் நான் இந்தியன் பிறகு தமிழன் என்று சொல்லும் அறிவு ஜீவிகளே இதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறிர்கள்?

தமிழர்களில் இருக்கும் கருங்காலி மற்றும் பீ தின்னும் கூட்டம் சீகியர்களிடம் இல்லை..

இப்படி வரலாற்று உண்மைகளை எடுத்து சொல்லி சீக்கியர்களுக்கு இப்படி நடக்கிறதுஇ தமிழர்களுக்கு மட்டும் ஏன் அநியாயம் செய்கிரிகள் என்று கேட்டால் நாம் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசுகிரோமாம் மற்றும் நாங்கள் எல்லாம் விடுதலை புலிகள் ஆதரவாளர்களாம்.........

அட நாய்களே.....

நியாத்தை கேட்பதற்கு நான் ஒன்றும் புலியாக இருக்க தேவை இல்லை…..
இந்தியனாக இருக்க தேவை இல்லை…..
தமிழனாகவோ இருக்க தேவை இல்லை

மனிதனாக இருந்தால் போதும்.....


இப்படிக்கு
மனிதர்
தமிழர்
இந்தியர்

நன்றி : தூவானம்




--
SIVA PRAKASAM
Software Engineer,
Mob: +91(0)9944005554
http://tamilarnesan.blogspot.com/

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Monday, May 18, 2009

கொழும்புவில் தமிழர்கள் சிங்கள காடையர்களால் தாக்கப்படுகின்றனர்.



வன்னியில் மக்களை கொன்று அவர்கள் பிணங்கள் மீது பீரங்கிகளை ஏற்றி இலங்கை இராணுவம் பெற்றுவரும் வெற்றியை கொண்டாடிவரும் சிங்கள காடையர்கள், கொழும்புவில் இருக்கும் தமிழர்களை இராணுவத்தின் உதவியுடன் தடுத்து நிறுத்தி அவர்கள் அடையாள அட்டையை பரிசோதித்து தமிழன் என்று உறுதிப்படுத்திக்கொண்டு பின் அவர்களை தனிமைப்படுத்தி அவமானப்படுத்துவதாகவும், தமிழர்கள், வசிக்கும் பகுதிகளுக்கு சென்று வீடுகளுக்குள் பட்டசுகளை வெடித்து அநாகரீக செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகின்றன..

இன்று அனைத்துலக ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் - தன் மாலை செய்தியில் கொழும்புவில் இருந்து பேசிய ஒரு தமிழரின் செவ்வியை ஒளிபரப்பியது. அதில் அவர் இந்த தகவல்களை தெரிவித்திருக்கிறார்.

மேலும், சிங்களக்காடையர்கள், இங்கிலாந்து தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்து, சாளரங்களின் கண்ணாடிகளை உடைத்ததாகவும், டேவிட் மில்லிபாந்து (இங்கிலாந்து வெளிவிவகார) அமைச்சர் உருவ பொம்மையை எரித்ததாகவும் கூறுகிறார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்தும் வாழ்விழந்தும் இருக்கும் நிலையில், தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வும் முன்வைக்கப்படாத நிலையில் இத்தகைய கொண்டாட்டங்கள் ஆபத்தின் அறிகுறிகளாகவே பார்க்கப்படுகிறது..


இறந்தவன் பிணத்தின் மீது கொண்டாட்டங்கள் நடத்தும் இவர்களின் மத்தியில் தமிழர்கள் எப்படி தலை நிமிர்ந்து வாழ முடியும் என்ற கேள்வி நம் மனதில் அழுத்தமாக எழுகிறது??!

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Tuesday, May 12, 2009

மென்பொருள் இளைஞர்களும் இந்திய தேர்தல்களும் : பங்களிப்பு என்ன?



இன்று காலை எழுந்ததும் ஒரு போர் வீரனை போல நடந்து சென்று தமிழின துரோகிகளை எதிர்க்க என்னிடம் கொடுக்கப்பட்ட ஒரே ஒரு ஜனநாயக ஆயுதத்தை சரியாக பயன்படுத்திவிட்டு வந்த கையோடு இந்த பதிவை இடுகிறேன்!

நான் தென் சென்னையில் அடையாறு அவையா தொடக்கப்பள்ளிக்கு சென்று என்னுடைய வாக்கை செலுத்தினேன். அப்போது இந்திய நேரம் காலை 7 மணி. வழக்கம் போல வாக்குப்பதிவு தொடங்கியவுடன் இருக்கும் சொற்ப கூட்டமே இருந்தது, குறிப்பாக கழக கண்மணிகள் முதல் வேலையாக தத்தமது வாக்குகளை செலுத்த நின்றுகொண்டிருந்தனர்.

நான் அந்த பகுதிக்கு அரசியல் ரீதியில் புதியவன், எனது சொந்த ஊர் திருப்பூர், ஆனால் சில மாதங்களுக்கு முன்பே முயற்சிகளின் எடுத்து எனது பெயரை புதிய வாக்காளர் பட்டியலில் இடம் பெறச்செய்து விட்டேன். எனது அடையாளத்தை சந்தேகித்த உள்ளூர் முகவர்களிடம், என்னை சரியான வாகாளர்தான் என அடையாளம் காட்டியவர், எனக்கு பெயர்பட்டியலில் இணைக்க உதவிய எங்கள் பகுதி கௌன்சிளர். அதனால் எதிர்ப்புகள் அடங்க தேர்தல் அதிகாரி எனக்கு கருப்பு மையிட அனுமதித்தார்.

இது நான் வாக்களிக்கும் 4 வது தேர்தல் என்றாலும், வாக்கு இயந்திரத்தை கண்டவுடன் எனது நெஞ்சில் பரபரப்பு, ஒரு ராட்சத அலையில் பயணிப்பதை போல உணர்ந்தேன், ஒரு கணப்பொழுதில், அங்கு இருந்த சலசலப்புக்கள் நிசப்தமாகி மனம் இத்தனை நாளாக, நான் கடுமையாக எதிர்த்த; விமர்சித்த காங்கிரஸ் தலைவர்களையும், மழைபோல நம்பி ஏமாற்றிய சுயநல கலைஞர் ஆகியோர் செய்த ஏமாற்று வித்தைகளையும், அங்கு என் இன மக்கள் தெருக்களில் எழுப்பிய அவல குரல்களையும் காலத்தில் பயணித்து காட்டியது.

இந்த இடைவெளியில், எனது கண்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு நேர் எதிர் சின்னத்தை கண்டுபிடித்திருந்தது. சற்றும் தாமதிக்காமல், எனது படுகொலை செய்யப்படும்; ஒடுக்கப்பட்ட இனத்தின் எதிர்ப்பை பதிவு செய்து விட்டு வெளியேறினேன்.

அங்கு வந்திருந்தவர்களில் பலர் முதியவர்கள், பெண்கள், அவர்கள் யாருக்கு வாகளிபார்கள்? என்ற எண்ணத்தைவிட எனக்கு மேலோங்கிய கேள்வி எங்கே என் இனத்து இளைஞர்கள்?? வாரம்தோறும் வெளியிடப்படும் புதிய தமிழ் சினிமாக்களை பார்ப்பதற்கு அலைமோதும் இளைஞர் பட்டாளம் எங்கே? இரவு பகலாக கணினியில் மாயாது எழுதும் அறிவார்ந்த மக்கள் எங்கே? தேர்தலை ஒட்டி மாதக்கணக்கில் பல மணி நேரங்களை செலவழித்து விமர்சனங்கள்; கேலிகள் செய்த மாந்தர்கள் எங்கே?

முதியவர்களும், பெண்களும் தமிழ்நாட்டில் அனேகமாக தங்கள் வீட்டின் ஆண் மகன் பரிந்துரைக்கும் கட்சிகளுக்கே வாக்களிபார்கள். இவ்வாறு பரிந்துரை செய்பவர்கள் பெரும்பாலும் உடன் பிரப்புக்கலாகவோ ரத்தத்தின் தத்தங்கலாகவோ இருப்பார்கள். இவர்கள் தங்கள் வாழ்நாளில் தத்தமது தலைவர்கள், கருணாநிதியாக இருக்கட்டும், ஜெயலலிதாவாக இருக்கட்டும், அவர்கள் என்னதான் அநியாயங்கள் செய்தாலும் அந்த கட்சிகளுக்கே தங்கள் வாக்குகளையும் தங்கள் குடும்பத்து வாக்குகளையும் அளிப்பவர்கள்.

குறிப்பிட தகுந்த அளவு தங்கள் முதல் வாக்குகளை ஆர்வத்துடன் செலுத்தவிருக்கும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள். இவர்களிடம் பரவியிருக்கும் கேள்வி ஏன் விஜய் தேர்தலில் போட்டியிடவில்லை?, நயன்தாரா நமீதாவுக்கு இவர்களிடம் உள்ள அபிமானத்தை காட்ட வாய்ப்பில்லாமல் போனது ஒரு வருத்தமாக தெரிகிறது.

இவற்றை சிந்தித்துக்கொண்டே வீட்டை அடைந்தேன், சில உண்மைகள் தெளிவாக புரிந்தது...
- இன்றைய காலகட்டத்தில், படித்த இளைஞர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த ஊர்களில் இல்லை.
- சொந்த மாநிலத்திலேயும், நாட்டின் பல பகுதிகலேயும், வெளிநாடுகளிலும் வேலை வைப்பு காரணமாக இடம் பெயந்து வாழும் நம் இளைஞர்களில் எண்ணிக்கை மிக அதிகம்.
- இவர்கள் தேர்தலுக்காக விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊர்களுக்கு பயணிப்பது முடியாத காரியம்தான்.
- சொந்த ஊர்களிலேயே இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள்; இருந்தும் வாக்களிக்க மனமில்லாதவர்கள்.

ஆகையால், நான் அவர்களுக்கு வைக்கும் வேண்டுகோள், நீங்கள் ஓட்டு போட முடியவில்லை என்றாலும், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் சொந்த ஊரில் உள்ள சொந்தங்களிடம் அவர்களை தவறாமல் வாக்களிக்க வேண்டுங்கள், இப்போதைய அரசியல் உண்மைகளை; நீங்கள் அவர்களுக்கு சொல்லுங்கள் நிச்சயம் கேட்ப்பார்கள், என்னிடம் நேற்று முதல் 10 நண்பர்கள்; உறவினர்கள் யாருக்கு ஓட்டு போடுவது? என்று கேட்டார்கள். அது போன்றவர்களை ஊக்கப்படுத்துங்கள்; உதவுங்கள். அப்போது தேர்தல் முடிவுகளை பார்க்க சுவாரச்யமாகவாவது இருக்கும்.

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Monday, May 11, 2009

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் இலங்கையை கண்டித்துள்ளார் : காணொளி

டேவிட் மில்லிபான்ட் கடந்த மூன்று நாட்களாக நடந்துவரும் மனித படுகொலைகளை வன்மையாக கண்டித்துள்ளார். அவர் பேசிய காட்சி இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது.




> ஐ.நா.வின் பேச்சாளரான கோர்டன் வைஸ் அவர்கள் இலங்கையில் எதிர்பாத்த இரத்தக்குளியல் "blood Bath" நடந்து விட்டது என்று கூறியதை சுட்டிக்காட்டிய மில்லிபான்ட், பெரும் தொகையான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை தாம் வன்மையாக கண்டிப்பதாக கூறினார்.

> கடந்த சனிக்கிழமை தொடக்கம் திங்கள் வரை நீடித்த கடும் தாக்குதல்கள், அங்கு பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது என்றும் இது தொடர்பாக தாம் போகல்ல கமாவிடம் பேசியதாகவும், கொலைகள் நிறுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் கூறினார்.

(கவனிக்க : பிரித்தானிய அமைச்சர் கண்டிக்கின்ற அளவுக்கு படுகொலைகள் நடந்த அதே நாளில் இங்கு 20 மைல் தொலைவில் உள்ள நம்மிடம் நமது தமிழ் காவலர் கலைஞர், இத்தாலி அன்னை சூனியா இருவரும் 'தங்கள் முயற்சியால் தான் போர் நின்றது' என்று கூறியது - நம்மை எவ்வளவு முட்டாள்கள் என்று அவர்கள் எண்ணுகிறார்கள் என்பதை உணர்த்தும்!)

> மேலும், அவர் இந்த போரை சாட்சி இன்றி நடக்கும் போர் "war without witness" என்று வர்ணித்துள்ளார். அவர் இது தொடர்பாக N.G.O மற்றும் பாதுகாப்பு சபை உறுப்பினர்களுடன் பேசவிருப்பதாக கூறினார்.

> பிரித்தானிய நிருபர் நாடு கடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த மில்லிபான்ட், இலங்கை என்ன செய்ய வேண்டுமோ அதற்க்கு எதிராக நடந்துகொள்கிறது என்று சாடினார். அதாவது நிருபர்களையும் சர்வதேச கண்காணிப்பாளர்களையும் அனுமதித்து ஐ.நா உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் கண்காணிப்பு அனுமதிக்கப்பட வேண்டும் அனால் அதற்கு மாறாக நிருபர்களை நாடுகடத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.

> இலங்கையின் இந்த போக்கு பாதுகாப்பு சபை உறுபினர்களை கவலை கொள்ள செய்துள்ளதாகவும், ஐ.நா இலங்கை விவகாரங்களை பற்றி தெரிந்து கொள்வது மட்டுப்படுத்தபடுவது ஒரு பெரும் பின்னடைவாக உள்ளது என்றார்.

> முக்கியமாக சர்வதேச நாணய நிதியம் மறுவாழ்வுக்காக அளிக்கும் நிதியை இலங்கை எப்படி பயன்படுத்துகிறது என்பதை பிரிடன் கூர்ந்து கவனிக்கும் என்றும் கூறினார்.

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Sunday, May 10, 2009

வடக்கு வழங்குகிறது தெற்கு தேறுகிறது : கருணாநிதி




நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அன்னை (சோ)சூனியா காந்தியுடன் சேர்த்து உரையாற்றிய கருணா நதி, உதிர்த்த வார்த்தைகளில் சில வருமாறு..

கருணா : வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பது அந்தக்காலம்; வடக்கு வழங்குகிறது தெற்கு தேறுகிறது என்பது இந்தக்காலம்.
- ஒரு அடிமை தன் எஜமானரை பற்றி பெருமையாக பேசுவதைப் போலத்தான் இருக்கிறது.

கருணா : சொக்கத்தங்கம் சோனியா.
- தங்கத்தை, சொக்கத்தங்கம் என்று அறிய எப்படி சோதனை செய்வார்கள்?

கருணா : தியாகத் திருவிளக்கு என்ற அடைமொழியை சோனியாவுக்குக் கொடுத்துள்ளோம்.
- ஆம் முக்கிய அமைச்சர் பதவிகளை இவர் வேண்டுகோளுக்கு மறுப்பு தெரிவிக்காமல் வழங்கும் தியாகிதான்!!

இதையெல்லாம் விடக் கொடுமை சோனியா பேசியதுதான்.

சோனியா : இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத்தருவதே காங்கிரஸின் லட்சியம். எங்கள் அரசின் இடைவிடாத வற்புறுத்தலின் காரணமாகத்தான் இலங்கை அரசு போர் நிறுத்தம் அறிவித்து இருக்கிறது.

- 20, 30 மைல் தொலைவில் அவர் பேசிக்கொண்டு இருக்கும் தருணத்தில் இரண்டு நாட்காளாக தொடர்து பீரங்கி தாக்குதல், பல்குழல் எறிகணை, முக்கியமாக வான் வழித்தாக்குதல் நடந்து கொண்டிருப்பதாகவும், ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் அதில் உயிரிழந்திருப்பதாகவும் - புதிய பாதுகாப்பு வலயத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் மருத்துவர் சண்முக ராஜ கூறுகிறார்!!

அன்னை - தங்களால்தான் போர் நிறுத்தப்பட்டது என்று பொய்பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார் அதே வேளை அங்கு கொத்துகுண்டுகள் நம் தமிழர்கள் தலையில் விழுந்து கொண்டிருக்கிறது. இந்த பொய் பிரச்சார நாடகத்தை நம் மக்கள் ஆட்டு மந்தைகளைப் போல நின்று ரசித்துக்கொண்டு இருகிறார்கள். இவர் பேசி முடிக்கும்போது ஆயிரத்திற்கு மேற்ப்பட்டோர் உயிரிழந்தும், சில ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தும் இருப்பார்கள்!

சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளை நம் நாட்டில் யாராலும் தோற்கடிக்க முடியாது... இதை அவர்கள் நன்கு உணர்திருக்கிறார்கள்...

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Saturday, May 9, 2009

ஒரே இரவில் 1,000-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை!: பீரங்கிக் குண்டு மழை பொழிந்து சிங்களப் படை கோரத் தாண்டவம்

ஒரே இரவில் 1,000-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை!: பீரங்கிக் குண்டு மழை பொழிந்து சிங்களப் படை கோரத் தாண்டவம்
[ஞாயிற்றுக்கிழமை, 10 மே 2009, 10:16 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் நோக்கி சிறிலங்கா படையினா நேற்றிரவு தொடக்கம் நடத்திய உச்சகட்ட கோரத் தாக்குதலில் 1,112-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' உள்ளிட்ட பகுதிகளை நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு 7:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் சகலவிதமான நாசகார ஆயுதங்களையும் பயன்படுத்தி தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தி வருவதாக வன்னியில் இருந்து 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இத்தாக்குதலினால் பதுங்குகுழிகளுக்குள்ளும் கூடாரங்களிலும் தூங்கிக்கொண்டிருந்த பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் காயமடைந்தும் உள்ளனர்.

பெருமளவிலான மக்களின் உடலங்கள் மீட்கப்பட முடியாத நிலையில் பதுங்குகுழிகளுக்குள்ளும் கூடாரங்களிலும் காணப்படுகின்றன. காயமடைந்தவர்களில் பலர் காயங்களுடன் தரையில் கிடந்தவாறு தங்களைக் காப்பாற்றுமாறு அவலக்குரல் எழுப்புவதாகவும் 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அத்துடன் வீதி, வீதியாக மக்களின் உடலங்கள் காணப்படுவதாகவும் மீட்க முடியாத அளவுக்கு சிறிலங்கா படையினரின் தாக்குதல்கள் தொடர்ச்சியாகவும் தீவிரவமாகவும் இருக்கின்றது எனவும் காயமடைந்தவர்களை எடுத்துச் செல்வதற்கு பணியாளர்கள் எவரும் இல்லை என்றும் 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதுவரையில் 1,112 பேரின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கணக்கானோர் காயமடைந்த நிலையில் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் மீட்கப்பட முடியாத நிலையில் இருப்பதால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000-க்கும் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

முள்ளிவாய்க்காலில் இயங்கும் தற்காலிக மருத்துவமனைக்கு காயமடைந்த நிலையில் 814 பேர் இதுவரையில் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதில் 112 சிறுவர்களும் அடங்குவதாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ அத்தியகட்சகர் வீரகத்தி சண்முகராஜா தெரிக்கின்றார்.

மருத்தவமனைக்கு கொண்டுவரப்பட்ட 257 உடலங்களில் 67 பேர் சிறுவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளையில் சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் நட்டாங்கண்டல் மருத்துவமனையும் கடுமையாக சேதமடைந்துள்ளதாக 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


நன்றி : புதினம்.

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Monday, May 4, 2009

ஒரு உண்ணாவிரதமும் பல கேள்விகளும்

கருணாநிதி உண்ணாவிரதம்.
ஈழ மக்களை காக்க உண்ணாவிரதத்தை தொடங்கினார்; முடித்தார்.

இந்த கேள்விகளை கேட்க நேரம் இன்னும் கடக்கவில்லை...


1. உங்களுக்கு மட்டும் எப்படி அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கொடுத்தார்கள் ஐயா,?

நாங்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு எங்கங்கோ அலைந்து திரிந்த போதும் தேர்தல் வரை ஈழ தமிழர்களுக்கான எந்த போரட்டங்களுக்கும் அனுமதி கொடுக்க முடியாது என்று காவல் துறையினர் சொன்னார்களே... உங்களுக்கு மட்டும் யார் கொடுத்தது அனுமதி?


2. ஈழத்திற்காக மக்கள் உண்ணாவிரதம் இருக்க முற்பட்டால் அவர்களை அலைகழித்து ஓட..ஓட.. விரட்டுவார்களே.. நீங்கள் மட்டும் எப்படி அறிவிப்பின்றி அதிகாலையிலே உண்ணாவிரதம் இருக்கின்றிர்கள்,


3. துரத்தி துரத்தி அடித்தாலும்,எத்தனை இன்னல்கள் கொடுத்தாலும் பிடிவாதமாக,நிச்சயமாக உண்ணவிரதம் இருப்போம் என உண்ணாவிரதம் இருந்த எம் இன வீர பெண்களை உண்ணாவிரம் இருந்தபோது கிண்டல்,கேலி செய்த உங்கள் வேட்புமனு தாக்கல் பார்டீகள் உங்களை கிண்டல் செய்யமாட்டார்களா..?


4. ஈழ தமிழர்களுக்காக நீங்கள் ஏதாவது செய்தால் பலத்த பாதுக்காப்பு மக்கள் செய்தால் தேசிய பாதுகாப்பா..?


5.ஈழ தமிழர்களுக்காக என்னையே அர்பணிக்கிறேன் என்று சொல்லி உண்ணாவிரதம் இருக்கின்றீர்களே..
ஈழ தமிழர்களை கொல்ல காங்கிரஸ் உடன் சேர்ந்து ஆயுதங்கள் அனுப்பிவிட்டு, கவிதை,கண்டனம்,தந்தி,தொலைபேசி என காலத்தை தாழ்த்தி மக்களை சாகடித்து விட்டு தேர்தலுக்காக உண்ணாவிரதம் என்று சொல்லிவரும் நீங்கள் செய்தது அர்பணம் என்றால்...

தமிழனாக பிறந்து, ஈழத்தில் நடக்கும் கொடுமைகளை தாங்கமுடியாமல்,
மக்களின் காசை கொள்ளை அடிக்காத,
நினைத்த நேரத்தில் அமைச்சரை மாற்றமுடியாத,
நினைத்த நேரத்தில் தொலைக்காட்சி ஆரம்பிக்க முடியாத,
சுவிஸ் வங்கி என்றால் என்ன என்று தெரியாத,
டெண்டர் காண்ட்ராக்ட் கமிசன்களை அறியாத,
என் மக்கள் எம் இனம் காப்பாற படவேண்டும் என்று மட்டுமே நினைத்துதங்களையே தீக்கிரையாக்கி கொண்ட முத்துகுமார் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டவர்கள் செய்ததற்க்கு பெயர் என்னவென்று சொல்வது,


6.உங்களைப்போல் உண்ணாவிரதம் இருக்க எல்லோருக்கும் அனுமதி கொடுத்திருந்தால் இதுநாள் வரை லட்சக்கண்க்கான மக்கள் உண்ணாவிரதம் இருந்து, ஈழ தமிழனின் நிலையை உலகுக்கு எளிதில் எடுத்துரைந்திருக்க முடியும், அப்போது ராஜபக்சேவுக்கு புரிந்திருந்திருக்கும் தமிழனை அடித்தால் உலகம் நம்மை அடிக்கும் என்று உணர்ந்திருப்பான்,


7.விளம்பரம் தேடிக்கொள்வதில் யாருக்கு முதலிடம் என்று போட்டி வைத்தால் சத்தியமாக உங்களுக்கு போட்டியாக கூட எவனாலும் வரமுடியாது,
எத்தனையோ தீக்குளிப்புகள்,எத்தனையோ தடையை மீறிய உண்ணாவிரதங்கள்,லட்சக்கணக்கிலான போரட்டங்கள்,எல்லாவற்றையுமே இருட்டடிப்பு செய்த உங்கள் குடும்ப உடகங்கள், உங்கள் உண்ணாவிரத்தை மட்டும் நேரடி ஒலி,ஒளி பரப்பு செய்து சாதனை புரிவது ஒன்றும் ஆச்சர்ய படவைக்கவில்லை,
உங்களை விட மக்களின் போராட்டங்களும்,உண்ணாவிரதமும்,தீக்குளிப்புமா முக்கியம்....,


8. உண்மையில் ஈழ தமிழனை காப்பது உங்களின் எண்ணம் என்றால்..


ஏன் ஈழ தமிழனுக்காக மாணவர்கள் போராடிய போது அவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்து போராட்டத்தை நசுக்கினீர்கள்?

ஏன் வழக்கறிஞர்கள் மீது காவல் துறையை கொண்டு தாக்குதல் நடத்தி அவர்களின் போராட்டத்தை வழுவிழக்க செய்திர்கள்?

ஏன் தியாகி முத்துகுமாரின் திருவுடலை தமிழகம் முழுவதும் ஊர்வலமாக எடுத்து செல்ல அனுமதி மறுத்தீர்கள்?

ஏன் ஈழ தமிழனுக்காக எவன் பேசினாலும் தேசியபாதுகாப்பு சட்டத்தை வைத்து குத்தினிர்கள்?

ஏன் ஈழ தமிழனுக்கான போரட்டங்களுக்கு அனுமதி மறுத்தீர்கள், இதன் மூலம் உலகத் தமிழன் சொந்த இனத்தின் அழிவை பார்த்து போராட்டங்கள் எதுவும் செய்யாத நாய்கள் என்று எங்களை காரித்துப்ப மாட்டானா?

ஏன் உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுத்திர்கள்,லண்டன்,பாரிஸ்,அமெரிக்கா,ஆஸ்திரேலியா,ஜெர்மனி,கனடா போன்ற அனைத்து நாடுகளிலும் தமிழனுக்காக உண்ணாவிரதம் இருக்கும் போது,அவர்கலெல்லாம் அதை செய்யாத தமிழ் நாட்டில் இருப்பவர்களை பார்த்து ஏளனமாக சிரிக்க மாட்டார்களா?

ஏன் M.P-க்களை வைத்து ராஜினாமா நாடகம் ஆடினிர்கள்?


மத்திய அரசுதான் நீங்கள் சொல்வதை கேட்கவில்லை என்றால்...மேற்கண்ட அனைத்தினையும் செய்தது நீங்கள்தானே....

இதன் மூலம் ஒன்று தெரிகிறது,இங்கு அடிமைகளாய் இருந்து சாவதற்கு..

ஈழத்தில் தமிழனோடு பட்டினி கிடந்து மண்ணை தின்றோ.. அல்லது காங்கிரஸ் கூட்டணி அரசு கொடுத்த குண்டுகளை மார்பில் ஏந்தியோ சாகலாம் என்றுதான் தோன்றுகிறது.

செய்வதையெல்லாம் செய்துவிட்டு இப்போது வந்து உண்ணாவிரதம் என்றால் என்ன அர்த்தம்...


9. ஈழ தமிழர் பிரச்சனையில் மட்டும் தயவு செய்து நாடகங்களை நிறுத்தி விட்டு உணர்வு பூர்வமாக எதேனும் செய்ய இயலுமா என்று பாருங்கள்,

மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க எதையாவது செய்வோம் என்ற மலிவான அரசியலை இதில் புகுத்துவதை நிறுத்திவிட்டு ஈழ தமிழனை காக்க ஆக்கபூர்வமான செயல்பாடுகளை செய்யமுடிந்தால் செய்யுங்கள் இல்லையென்றால் என்னால் எதுவும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டுவிடுங்கள்,


10. நாளையே ப்ரனாப் முக்கர்ஜி ராஜபக்சேவை நல்லிரவில் சந்தித்து விட்டு வந்தால், தயவு செய்து இது என் உண்ணாவிரததிற்கு கிடைத்த வெற்றிதான் என்று சொல்லி மக்கள் காதில் பூ இல்லை..இல்லை.. மாலையை சுற்றாதீர்கள், அவர் எதற்காக அங்கு செல்வார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்,


11.உங்களுக்கு அறிவுரை சொல்லவோ,வாழ்த்துக்கள் சொல்லவோ எங்களுக்கு வயதில்லை அதனால் நாங்கள் வணங்கி கேட்டுகொள்வதெல்லம் "பதவியை விட பெயர்தான்தான் முக்கியம்" இன்னும் 1000 வருடங்களுக்கு பிறகும் காமராஜர்,கக்கன் போன்றோர்களின் பெயர்கள் நிலைத்திருக்கும்,அவர்களைபோல் இல்லை என்றாலும் பரவாயில்லை ஹிட்லர்,நீரோ போன்றவர்களின் பெயர்வரிசைக்கு சென்றுவிடாதீர்கள் என்பதுதான் நம் மக்களின் விருப்பம்,


11. மன பூர்வமான அதிரடி முடிவை எடுக்காமல் வெறுமனே நல்ல செய்தி வரும், தந்தி அடித்தேன்,என்று தேவையற்ற ஒன்று,தனி ஈழம் தான் தீர்வு என்பது அனைவரும் அறிந்த ஒன்று அதை முனெடுத்து சொல்லாமல் பேசிகொண்டேயிருப்பது தேவையற்றது, ஜெயலலிதாவே சொல்லிவிட்டார்கள் உங்கள் பங்குக்கு தேர்தலுக்காகவாவது ஏதாவது அதிரடியாக சொல்லவில்லை என்றால் நீங்கள் வெத்துவேட்டு என்ற எதிர்கட்சிகளின் கூற்று உண்மையாகிவிடும் வாய்ப்பு உள்ளது.

நன்றி : தமிழ்மக்கள்குரல்

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.