Monday, May 4, 2009

ஒரு உண்ணாவிரதமும் பல கேள்விகளும்

கருணாநிதி உண்ணாவிரதம்.
ஈழ மக்களை காக்க உண்ணாவிரதத்தை தொடங்கினார்; முடித்தார்.

இந்த கேள்விகளை கேட்க நேரம் இன்னும் கடக்கவில்லை...


1. உங்களுக்கு மட்டும் எப்படி அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கொடுத்தார்கள் ஐயா,?

நாங்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு எங்கங்கோ அலைந்து திரிந்த போதும் தேர்தல் வரை ஈழ தமிழர்களுக்கான எந்த போரட்டங்களுக்கும் அனுமதி கொடுக்க முடியாது என்று காவல் துறையினர் சொன்னார்களே... உங்களுக்கு மட்டும் யார் கொடுத்தது அனுமதி?


2. ஈழத்திற்காக மக்கள் உண்ணாவிரதம் இருக்க முற்பட்டால் அவர்களை அலைகழித்து ஓட..ஓட.. விரட்டுவார்களே.. நீங்கள் மட்டும் எப்படி அறிவிப்பின்றி அதிகாலையிலே உண்ணாவிரதம் இருக்கின்றிர்கள்,


3. துரத்தி துரத்தி அடித்தாலும்,எத்தனை இன்னல்கள் கொடுத்தாலும் பிடிவாதமாக,நிச்சயமாக உண்ணவிரதம் இருப்போம் என உண்ணாவிரதம் இருந்த எம் இன வீர பெண்களை உண்ணாவிரம் இருந்தபோது கிண்டல்,கேலி செய்த உங்கள் வேட்புமனு தாக்கல் பார்டீகள் உங்களை கிண்டல் செய்யமாட்டார்களா..?


4. ஈழ தமிழர்களுக்காக நீங்கள் ஏதாவது செய்தால் பலத்த பாதுக்காப்பு மக்கள் செய்தால் தேசிய பாதுகாப்பா..?


5.ஈழ தமிழர்களுக்காக என்னையே அர்பணிக்கிறேன் என்று சொல்லி உண்ணாவிரதம் இருக்கின்றீர்களே..
ஈழ தமிழர்களை கொல்ல காங்கிரஸ் உடன் சேர்ந்து ஆயுதங்கள் அனுப்பிவிட்டு, கவிதை,கண்டனம்,தந்தி,தொலைபேசி என காலத்தை தாழ்த்தி மக்களை சாகடித்து விட்டு தேர்தலுக்காக உண்ணாவிரதம் என்று சொல்லிவரும் நீங்கள் செய்தது அர்பணம் என்றால்...

தமிழனாக பிறந்து, ஈழத்தில் நடக்கும் கொடுமைகளை தாங்கமுடியாமல்,
மக்களின் காசை கொள்ளை அடிக்காத,
நினைத்த நேரத்தில் அமைச்சரை மாற்றமுடியாத,
நினைத்த நேரத்தில் தொலைக்காட்சி ஆரம்பிக்க முடியாத,
சுவிஸ் வங்கி என்றால் என்ன என்று தெரியாத,
டெண்டர் காண்ட்ராக்ட் கமிசன்களை அறியாத,
என் மக்கள் எம் இனம் காப்பாற படவேண்டும் என்று மட்டுமே நினைத்துதங்களையே தீக்கிரையாக்கி கொண்ட முத்துகுமார் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டவர்கள் செய்ததற்க்கு பெயர் என்னவென்று சொல்வது,


6.உங்களைப்போல் உண்ணாவிரதம் இருக்க எல்லோருக்கும் அனுமதி கொடுத்திருந்தால் இதுநாள் வரை லட்சக்கண்க்கான மக்கள் உண்ணாவிரதம் இருந்து, ஈழ தமிழனின் நிலையை உலகுக்கு எளிதில் எடுத்துரைந்திருக்க முடியும், அப்போது ராஜபக்சேவுக்கு புரிந்திருந்திருக்கும் தமிழனை அடித்தால் உலகம் நம்மை அடிக்கும் என்று உணர்ந்திருப்பான்,


7.விளம்பரம் தேடிக்கொள்வதில் யாருக்கு முதலிடம் என்று போட்டி வைத்தால் சத்தியமாக உங்களுக்கு போட்டியாக கூட எவனாலும் வரமுடியாது,
எத்தனையோ தீக்குளிப்புகள்,எத்தனையோ தடையை மீறிய உண்ணாவிரதங்கள்,லட்சக்கணக்கிலான போரட்டங்கள்,எல்லாவற்றையுமே இருட்டடிப்பு செய்த உங்கள் குடும்ப உடகங்கள், உங்கள் உண்ணாவிரத்தை மட்டும் நேரடி ஒலி,ஒளி பரப்பு செய்து சாதனை புரிவது ஒன்றும் ஆச்சர்ய படவைக்கவில்லை,
உங்களை விட மக்களின் போராட்டங்களும்,உண்ணாவிரதமும்,தீக்குளிப்புமா முக்கியம்....,


8. உண்மையில் ஈழ தமிழனை காப்பது உங்களின் எண்ணம் என்றால்..


ஏன் ஈழ தமிழனுக்காக மாணவர்கள் போராடிய போது அவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்து போராட்டத்தை நசுக்கினீர்கள்?

ஏன் வழக்கறிஞர்கள் மீது காவல் துறையை கொண்டு தாக்குதல் நடத்தி அவர்களின் போராட்டத்தை வழுவிழக்க செய்திர்கள்?

ஏன் தியாகி முத்துகுமாரின் திருவுடலை தமிழகம் முழுவதும் ஊர்வலமாக எடுத்து செல்ல அனுமதி மறுத்தீர்கள்?

ஏன் ஈழ தமிழனுக்காக எவன் பேசினாலும் தேசியபாதுகாப்பு சட்டத்தை வைத்து குத்தினிர்கள்?

ஏன் ஈழ தமிழனுக்கான போரட்டங்களுக்கு அனுமதி மறுத்தீர்கள், இதன் மூலம் உலகத் தமிழன் சொந்த இனத்தின் அழிவை பார்த்து போராட்டங்கள் எதுவும் செய்யாத நாய்கள் என்று எங்களை காரித்துப்ப மாட்டானா?

ஏன் உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுத்திர்கள்,லண்டன்,பாரிஸ்,அமெரிக்கா,ஆஸ்திரேலியா,ஜெர்மனி,கனடா போன்ற அனைத்து நாடுகளிலும் தமிழனுக்காக உண்ணாவிரதம் இருக்கும் போது,அவர்கலெல்லாம் அதை செய்யாத தமிழ் நாட்டில் இருப்பவர்களை பார்த்து ஏளனமாக சிரிக்க மாட்டார்களா?

ஏன் M.P-க்களை வைத்து ராஜினாமா நாடகம் ஆடினிர்கள்?


மத்திய அரசுதான் நீங்கள் சொல்வதை கேட்கவில்லை என்றால்...மேற்கண்ட அனைத்தினையும் செய்தது நீங்கள்தானே....

இதன் மூலம் ஒன்று தெரிகிறது,இங்கு அடிமைகளாய் இருந்து சாவதற்கு..

ஈழத்தில் தமிழனோடு பட்டினி கிடந்து மண்ணை தின்றோ.. அல்லது காங்கிரஸ் கூட்டணி அரசு கொடுத்த குண்டுகளை மார்பில் ஏந்தியோ சாகலாம் என்றுதான் தோன்றுகிறது.

செய்வதையெல்லாம் செய்துவிட்டு இப்போது வந்து உண்ணாவிரதம் என்றால் என்ன அர்த்தம்...


9. ஈழ தமிழர் பிரச்சனையில் மட்டும் தயவு செய்து நாடகங்களை நிறுத்தி விட்டு உணர்வு பூர்வமாக எதேனும் செய்ய இயலுமா என்று பாருங்கள்,

மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க எதையாவது செய்வோம் என்ற மலிவான அரசியலை இதில் புகுத்துவதை நிறுத்திவிட்டு ஈழ தமிழனை காக்க ஆக்கபூர்வமான செயல்பாடுகளை செய்யமுடிந்தால் செய்யுங்கள் இல்லையென்றால் என்னால் எதுவும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டுவிடுங்கள்,


10. நாளையே ப்ரனாப் முக்கர்ஜி ராஜபக்சேவை நல்லிரவில் சந்தித்து விட்டு வந்தால், தயவு செய்து இது என் உண்ணாவிரததிற்கு கிடைத்த வெற்றிதான் என்று சொல்லி மக்கள் காதில் பூ இல்லை..இல்லை.. மாலையை சுற்றாதீர்கள், அவர் எதற்காக அங்கு செல்வார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்,


11.உங்களுக்கு அறிவுரை சொல்லவோ,வாழ்த்துக்கள் சொல்லவோ எங்களுக்கு வயதில்லை அதனால் நாங்கள் வணங்கி கேட்டுகொள்வதெல்லம் "பதவியை விட பெயர்தான்தான் முக்கியம்" இன்னும் 1000 வருடங்களுக்கு பிறகும் காமராஜர்,கக்கன் போன்றோர்களின் பெயர்கள் நிலைத்திருக்கும்,அவர்களைபோல் இல்லை என்றாலும் பரவாயில்லை ஹிட்லர்,நீரோ போன்றவர்களின் பெயர்வரிசைக்கு சென்றுவிடாதீர்கள் என்பதுதான் நம் மக்களின் விருப்பம்,


11. மன பூர்வமான அதிரடி முடிவை எடுக்காமல் வெறுமனே நல்ல செய்தி வரும், தந்தி அடித்தேன்,என்று தேவையற்ற ஒன்று,தனி ஈழம் தான் தீர்வு என்பது அனைவரும் அறிந்த ஒன்று அதை முனெடுத்து சொல்லாமல் பேசிகொண்டேயிருப்பது தேவையற்றது, ஜெயலலிதாவே சொல்லிவிட்டார்கள் உங்கள் பங்குக்கு தேர்தலுக்காகவாவது ஏதாவது அதிரடியாக சொல்லவில்லை என்றால் நீங்கள் வெத்துவேட்டு என்ற எதிர்கட்சிகளின் கூற்று உண்மையாகிவிடும் வாய்ப்பு உள்ளது.

நன்றி : தமிழ்மக்கள்குரல்

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

7 comments:

நாகை சிவா said...

நெத்தியடி!

senthilkumar said...

தமிழ் நேசன் அவர்களே!!!!.... நன்றாக சவுக்கடி கொடுத்தீர்கள்..
தொடரட்டும் உங்கள் சேவை.

இத்தாலி அன்னையின் அடிவருடிகளுக்கும் கொலைஞர் கருணாநிதிக்கும் உங்களின் கேள்விகள் உரைக்காது.

இவர்கள் எல்லாம் தமிழுக்கு வாழ்பவர்கள் இல்லை. தமிழனை கொலை செய்ய வாழ்பவர்கள்.

கொலைஞர் கருணாநிதிக்கு தோல்வி பயம் வந்துடுச்சு. அதனால் தான் காய்ச்சல் வந்துவிட்டது. இந்த காய்ச்சலை வைத்து என்ன என்ன நாடகம் ஆட போராங்களோ?

Anonymous said...

Where is luckylook? he'll have one passage to repudiate the comments here and still support MuKa. MuKas is not ashamed of repeatedly doing drama stunts like this, because he knows there are stupid luckylooks who'd still come out and defend his actions.

Kaipillai said...

Kappithanama pesikittu poi pillale padika vaiyangaya

Anonymous said...

HAAA KARUNANITHI IS A FUNNY MAN!!!
EENAPAYAL!!!!

Unknown said...

well done keep it up

Ruban said...

ivvalavu dhroghathaiyum seidhu vittu eppadi nimmadhiyaaha uranga midihindradhu Karunanidhiyal?

Post a Comment