Monday, February 9, 2009

தீதும் நன்றும்

வணக்கம் நன்பர்களே, சில வாரங்களுக்கு முன்பு நான் பணி புரியும் அலுவலகதில் ஒரு ஓய்வு நேரத்தில், எனது நன்பர்களுக்குள், தமிழை தாய் மொழியாக கொண்டு இந்தியாவில் வாழ்வது சிரமமான ஒன்றாக இருப்பதாக சிலரும், அப்படி எதுவும் இல்லை வேண்டுமென்றால் இந்தியை படித்துக்கொள்ளலாம் என்றும் பல்வெரு விதமான கருதுக்கள் வந்தன. அதிலும் குரிப்பாக எனது நன்பர்களில் ஒருவர், தமிழ் மொழி என்று ஒன்றை கொண்டு தனியாக இருப்பாதை விட அனைவரும் தமிழை கைவிட்டு இந்தியை கற்றுக்கொண்டால் எளிதாக இருக்கும் என்று சொன்னது என்னை மிகவும் வருத்தபட வைத்தது.

இது தொடர்பாக நான் திரு.நாஞ்சில் நாடன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். (இவர் ஆனந்த விகடனில் வாரம் தோரும் "தீதும் நன்றும்" என்ற தலைபில் கட்டுரைகளை எழுதி வருகிரார்.) நான் அவருக்கு எழுதிய கடிதத்தை ஆங்கிலதில் கீழே இனைத்துளேன்.

from Siva Prakasam
to av@vikatan.com
date Sat, Dec 27, 2008 at 9:39 AM
subject Regarding - Thedhum nandrum
mailed-by gmail.com

Dear Nangil Naadan,

Good morning. I'm a regular reader of your article Thedhum nandrum, it's one of my favorite part in AV. I would like to bring to your kind attention one point.

Yesterday, I our office, we had a group discussion. the discussio was regarding having Hindi as our national language and we (Tamils) don't know Hindi - Controvercial. At one point of the discussion. one person said why should we have Tamil? rather than learning 2 languages hindi and tamil, why don't we take one common language for our country - Hindi, and lets leave tamil. He is a Tamilan. I become anxious, I said for every one mother tongue is important, see France, Germany, Itally, Japan, etc.. and I said, onese culture and tradition has to be hold high.

He asked me tell me what is Tamils culture and tradition, what we are following now?! One moment I was stopped, I don't know what to say clearly. I was ashamed that I can't counteract a simple question to me regarding my mother language and tradition.. I learnt lot of Tamil books like Silapathikaaram, Thirukkural, Bharathiyar paadalgal, etc.. I remember "Tamilai igaldhavanai, thaai thaduthaalum videan", but, I was sorry, I could not help!!

Please write a article regarding the impoertance of our Mother tongue and benefits of beholding it!!

I'm a software engineer, most of the guys working with me, I saw are some how addict to western civilizations.. they are ready to accept North Indian culture, they are ready to celebrate, Holly as joyfull one rather than Pongal!! It is very important, people like you educate people like me and my friends.

Warm regards
Siva Prakasam.

Longlive Tamil..


இந்த கடிதத்திற்கு அவருடைய கட்டுரைகளில் பதில் அளிப்பார் என்று எதிபார்திருந்தேன்...

இந்தோ சென்ற வாரம் அவர் எழுதிய கட்டுரையில் பதிலளிதிருந்தார். அந்த கட்டுரையில் இருந்து சில பகுதிகளை நான்
உங்களுக்காக பதிவு செய்திருகிறேன்.

மொழி என்பது ஊடகம். ஆனால், அதை தாண்டியும் அது பண்பாடு, கலை, ஞானம், வரலாறு என சகலத்தயும் தாங்கி நிற்பது; அடயாளப் படுத்துவது. முதலில் சிந்தனையில் இருந்து மொழி பிறந்தது என்பார்கள். இன்று சிந்தனையே மொழி மூலமாக பிறக்கிறது.

தாய் மொழி என்பது தற்செயலான நிகழ்வு அல்ல. கருவில் இருக்கும்போதே குழந்தை கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறது என்பது விஞ்ஞானம். எனில், வீர அபிமன்யு நமக்கு ஒரு இதிகாச எடுத்துக்காட்டு. சிலர் கேட்பார்கள், 'பிரந்த அன்று ஒரு தமிழ் குழந்தையை கொண்டுபோய் சீனாவில் வளர்த்தால், அதன் தாய் மொழி எது?' என. கருவில் இருந்து கற்று கொள்வதும் மரபணுக்கள் மூலம் அதற்க்கு கிடைக்கும் தாய்மொழி அறிவுக்கு நாம் என்ன கணக்கு வைத்துக்கொள்வது?

தாய் மொழி யாவர்க்கும் வெறும் ஊடகம் மட்டுமல்ல. நூறாயிரம் பேர்கொண்ட சிற்றினக் குழுவானாலும், எட்டுக் கோடிப் பேர்கொண்ட பேரினம் ஆனாலும், தாய்மொழி தாய்க்கும் உயிர்க்கும் நிகரானது; மேலானது. தாய் என்பவள் எப்படி பால் தரும் இயந்திரம் இல்லயோ, அவ்விதமே தாய்மொழியும் வெறும் ஊடகம் மட்டுமே அல்ல!

தாய்மொழிக்கான இடம் பறிபோவதால்தான் 25 ஆண்டுகள் மேலாக, லட்சக்கணக்கில் உயிர்த் தியாகம் புரிந்து, ஈழத்தில் விடுதலைப் போராட்டம் நடக்கிறது. எத்தனை வாதங்கள் வைத்து மூடிப்பொதியப் பார்தாலும் அடிப்படை உண்மை மாய்ந்து போய்விடுவதில்லை. 'தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்' என்பது வெறும் கோசமாக மலினப்பட்டுப் போனாலும் அந்த கூற்றின் உயிர் அழிந்துவிடுவது இல்லை.

நமது தாய் மொழி தமிழ் அதில் நமக்குச் சந்தேகம் இல்லை. எத்தனை புறக்கணித்தாலும் அவமரியாதை செய்தாலும் அதில் மாற்றம் இல்லை. 'நாய் குடிக்க மறுக்கும் கஞ்சியைத் தாய்க்கு ஊற்று' எனும் மனோபாவம் உள்ளவருக்கும் கூடத் தாய்மொழி, தாய்மொழியேதான்! நம்மூர் பிராமணர்களுக்கும் தாய் மொழி தமிழ்தான்; வடமொழி அல்ல. ஆனால், வல்லந்தமாக நாம், 'நீங்கள் தமிழர் இல்லை!' எனும் பழியை அவர்மீது ஏற்றித் தூற்றுகிறோம்.

எளிதில் மதிப்பெண் வாங்கலாம் என்பதால், செல்வர் வீட்டுக் குழந்தைகள் யாவருமின்று ஃப்ரென்சு, ஜெர்மன், இந்தி என மொழி பாடம் கற்கிறார்கள். தமிழில் எழுதப் படிக்கத் தெரியாமலேயே தமிழ்நாட்டில் வாழும் தமிழர் குழந்தைகள் ஆரம்பக் கல்வி, உயர் கல்வி பெற்றுவிட முடிகிறது. அவர்கள் ஆங்கிலதில் கடுகு வருக்கிறார்கள். கைம்மாற்றாக ஐந்து ரூபாய் கேட்க, "யார், கிவ் மீ ஃபை பக்ஸ் யார்!" என்கிறார்கள்.

தொலைக்காட்ச்சிகளில், தமிழ் சேனல்களில் எவர் பண்டம் பலகாரம் செய்துகாட்டினாலும், ருசி பார்த்து சொல்பவர், இரு விரல்களால் கருவண்டு ஒன்றினைத் தூக்குவது போல் தொட்டும் தொடாமலும் ஒரு விள்ளல் எடுத்து, உதட்டுச் சாயம் கெட்டு விடாமல் வாயினுள் இட்டதும் சொல்லும் முதல் வாய்ப்பாடு 'வாவ்'! இப்போது எல்லோர்கும் இந்த புதிய பேய் பிடிதிருக்கிறது. சங்கீத கட்சேரிகள், 'பலே, சபாஸ், பேஸ்' எல்லாம் படமெடுத்து ஆடுகின்றது. 'ஆகா' அழிந்துவிடும் போலிருக்கிறது. சினிமாக்கள் தமிழ் சமூகத்தினுள் குத்திச் செலுத்திக் கொண்டிருப்பவை, 'சூப்பர், மாம்ஸ், மச்சான்ஸ்'. இபோது வேகமாக இறக்குமதி ஆகிக்கொண்டு இருப்பது, 'கூல்'. புதுசாக காப்பி அடிப்பவன் மேதாவி என்பது விதி.

நன்றி நாஞ்சில் நாடன் அவர்களே!!

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

9 comments:

Unknown said...

:) Great initiative
Mathematics to talk to nature by physists, C++ to talk to automation engines,Chess language to talk to peer players, some language (What your society understands) to socialize, Breathing Language to take to your consious mind , Spiritual language (Emotional feelings) to talk to God,where your language or my language comes here? The paradigm to meaning of life is subjective and hence the interdependent with whom I need to interact become subjective in turn the meaning of language become subjective. :)

தமிழர் நேசன் said...

Could you please reveal your identity??!

Unknown said...

First of all i thank u for giving the importance of our mother tongue & how importance for us? In meantime am very shocking of ur colleagues, how they think like no need to want a mother tongue. Any way you have done a Great initiatives. congratulation for Ur effort for av cover story.

Srinivasan said...

Knowing more than one language is not a wrong thing. But knowing the National Language is a must than English because it helps to communicate within the nation, and thereby we can be united and friendly behavior among the states. Also, Hindi can be made a second language (atleast optional) in the State's (Tamil Nadu) Educational Curriculam.

-Srinivasan

எட்வின் said...

ஆஹா.... இப்படி எல்லாருமே இங்கிலீசிலேயே எழுதினா... எத்தன பதிவ தான் எழுத்து கூட்டி படிக்கிறது... மேல எழுதி இருக்கிறவங்களே உங்களத் தானுங்கோ. டமில் வலந்திறும் ணள்ளா... பீட்டர்கள் வாழ்க

Anonymous said...

correct your spelling mistakes first.then you can worry about tamil

malar said...

Srinivasan said...
Knowing more than one language is not a wrong thing. But knowing the National Language is a must than English because it helps to communicate within the nation, and thereby we can be united and friendly behavior among the states. Also, Hindi can be made a second language (atleast optional) in the State's (Tamil Nadu) Educational Curriculam.

இது ரொம்ப சரியே !!!!!!!!!!

Anonymous said...

இந்தியா நாட்டுக்கு ஏன் இந்தி தேசிய மொழியா இருக்கணும்?
ஏன் english மட்டும் தேசிய மொழியா இருக்கட்டும்.
அந்த அந்த மாநிலம் அந்த அந்த மொழில இருக்கட்டும்.
இந்தியாவை அடையாளப் படுத்த இந்தி வேணும்னா என்னை அடையாளப் படுத்த
என் மொழி எனக்கு வேணும்.

Unknown said...

தாய் மொழிக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கொடுக்கவேண்டும்.அதை எந்த பொழுதிலும் எக்காரணம் கொண்டும் விளையட்டுக்ககவோ வேறு எதற்காகவும் அதை சிதைக்க கூடாது என்ற உணர்வு வேண்டும்., தமிழனை தவிர மற்ற எல்லாருக்கும் இந்த உணர்வு உண்டு தமிழனும் இந்த உணர்வுடன் வாழ்திருந்தால் மேற்கண்ட சந்தேகத்திற்கே இடமிருத்திருக்காது. நன்றி

Post a Comment