Wednesday, February 25, 2009

ஒபாமாவின் புதிய அயல் கொள்முதல் கொள்கை, இந்திய மென்பொருள் துறை இளைஞர்களை பாதிக்கும்; மாற்று வழி என்ன??!




அமெரிக்கா சந்தித்துக் கொண்டிருக்கும் பொருளாதார சிக்கல் மற்றும் உள்நாட்டு மக்களின் வேலையில்லா திண்டாட்ட நிலைமைகளை சமாளிக்க ஒபாமா அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள கொள்கை இந்திய மென்பொருள் துறையில் பணிபுரியும் இளைஞ்ர்களை கவலையுற செய்திருக்கிறது...

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "நாம் நமது வரி விதிக்கும் கொள்கையை தெளிவானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்றி, நமது நாட்டில் உள்ள வேலைவைப்புகளை அயல் கொள்முதல் ('Outsourcing') மூலம் குறைக்கும் நிர்வனங்களுக்கு அதிக வரியும், உள் நாட்டு மக்களுக்கு வேலைவாப்புகளை வழங்கும் நிறுவனங்களுக்கு வரிக்குறைப்பும் செய்து மாற்றியமைப்போம்" என்று கூறியுள்ளார்..

ஒபாமாவின் இந்த அறிக்கை, இந்தியா போன்ற மலிவான நாடுகளிடம் அயல் கொள்முதல் ('Outsourcing') செய்யும் அந்நாட்டு நிறுவனங்களுக்கு பலத்த எச்சரிக்கை சமின்ஞைகளை அனுப்பி உள்ளது...


மேலும் அவருடைய முதல் பாராளுமன்ற உரையில், "எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளங்கள் அமெரிக்காவின் எல்லைகளை கடந்து போவதை தாம் விரும்பவில்லை என்றும், மற்ற அமெரிக்கர்களும் விரும்ப மாட்டார்கள் என்று தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்!"

ஒபாமாவின் இது போன்ற தொடர்ச்சியான அயல் கொள்முதல் எதிரிப்பு நிலைப்பாடு இந்திய நிறுவனகளை கவலையுற செய்திருக்கிறது... எனென்றால், அமெரிக்காவின் மொத்த அயல் கொள்முதல் நிதியான $64 பில்லியன் தொகையில் 60% சதவிகிதம் இந்தியாவுக்கு வருகிறது...


இதுமட்டுமல்ல, அமெரிக்காவில் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிறுவனந்களை மீட்கும் அமெரிக்கா அவர்களுக்கு ஒரு முக்கிய கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது. அதாவது, "H-1B என்று அழைக்கப்படும்
மூன்று வருட கால வீசாவில் அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டவரை, வேலைக்கு அமர்த்தக்கூடாது". இந்த கட்டுப்பாடும் இந்தியாவை ஏற்கனவே கடுமையாக பாதித்திருக்கிறது. ஏனென்றால், அமெரிக்க அரசால் வருடம் தோறும் விநியோகிக்கப்படும் 65,000 H-1B வீசாகளில் 21,667 இந்திய மென்பொருள் வல்லுனர்களுக்கே வழங்கப்படுகிறது!!!

ஏற்கனவே, பொருளாதார அழுத்தங்களை சந்தித்துவரும் இந்தியாவிற்கும், அதன் மென்பொருள் நிறுவனங்களுக்கும் அமெரிக்கா அதிபரின் கொள்கைகள் பெரும் சவாலாகவே இருக்கும் என்பது உறுதி...

இனி நாம் பார்க்க வேண்டியது, தமிழகத்தில் இருந்து ஒவ்வொரு வருடமும் பல ஆயிரக்கணக்கில் மென்பொருள் துறையை நம்பி படித்து வெளியில் வரும் மாணவர்களின் நிலை என்ன?

மாணவர்கள் பெரும்பாலும் மென்பொருள் துறையை தேர்ந்தெடுத்து படிப்பது எந்த அளவிற்கு அவர்களுக்கு ஒரு நம்பகமான எதிகாலத்தை ஏற்படுத்தும்??

ஏற்கனவே மென்பொருள் துறையில் இருப்பவர்கள், ஒருவேளை தங்களுக்கு வேலை பறிபோகும் சூல்நிலை வந்தால் மாற்று வேலைகளை செய்ய தயாராக இருக்கின்றனரா??

மேலும் இது தொடர்பான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கு கூறுங்கள்...

நன்றி...

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

3 comments:

பழமைபேசி said...

நண்பா, இந்திய ஊடகங்களின் கண்ணோட்டத்துல தகவல்கள் இருக்கு... நான் இன்று மாலையில், எமது கண்ணோட்டத்தில் பதிவிடுகிறேன்.

தமிழர் நேசன் said...

காத்திருக்கிறேன்... நன்றி...

பழமைபேசி said...

http://maniyinpakkam.blogspot.com/2009/02/blog-post_26.html

Post a Comment